Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒடிசா: புவனேஸ்வரில் ரூ.500 நோட்டுகளை ஜன்னல் வழியே வீசிய அரசு அதிகாரி – ரூ.2.1 கோடி பறிமுதல்

Odisha Vigilance Raid:ஒடிசா மாநில ஊரக வளர்ச்சித் துறை முதன்மை பொறியாளர் பைகுண்ட் நாத் சரங்கியின் வீட்டில் விழிப்புணர்வுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் போது, அவர் ரூ.500 நோட்டுகளை ஜன்னலில் இருந்து வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. புவனேஸ்வர், அங்குல், பிபிலி உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் மொத்தம் ரூ.2.1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒடிசா: புவனேஸ்வரில் ரூ.500 நோட்டுகளை ஜன்னல் வழியே வீசிய அரசு அதிகாரி – ரூ.2.1 கோடி பறிமுதல்
புவனேஸ்வரில் ரூ.500 நோட்டுகளை ஜன்னல் வழியே வீசிய அரசு அதிகாரிImage Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 30 May 2025 17:26 PM

ஒடிசா மே 30: ஒடிசா (Odisa) புவனேஸ்வரில், ரூ.500 நோட்டுகளைக் ஜன்னலிலிருந்து வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மாநில ஊரக வளர்ச்சி துறையின் முதன்மை பொறியாளர் (Chief Engineer of the State Rural Development Department) பைகுண்ட நாத் சரங்கி (Baikunta Nath Sarangi) மீது சோதனை நடத்தப்பட்டது. அங்குல், புவனேஸ்வர், பிபிலி ஆகிய ஏழு இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இதில் ரூ.2.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சரங்கியின் வீடுகளில் மட்டும் ரூ.2.1 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமான வருமானத்தைவிட அதிக சொத்துகள் வைத்திருந்ததாக அவர்மீது குற்றச்சாட்டு உள்ளது.

முதன்மை பொறியாளர் வீட்டில் நடந்த சோதனை

ஒடிசாவின் புவனேஸ்வரில் ஊதியத்தை தாண்டிய சொத்துகள் சம்பந்தமான வழக்கில் அதிரடி சோதனைகள் நடந்து வருகின்றன. மாநில அரசின் ஊரக வளர்ச்சி துறையின் முதன்மை பொறியாளரான பைகுண்ட நாத் சரங்கி என்பவர், அவரது புவனேஸ்வர் குடியிருப்பில் கண்காணிப்பு அதிகாரிகள் வந்தபோது, ரூ.500 நோட்டுக் கட்டுகளை ஜன்னலிலிருந்து கீழே வீசி தள்ளிய பரபரப்பான சம்பவம் இடம் பெற்றது.

ரூ.500 நோட்டுகளை ஜன்னல் வழியே வீசிய அரசு அதிகாரி

 

மொத்தம் சுமார் ரூ.2.1 கோடி பணம் பறிமுதல்

சரங்கி மீது வழக்கமான வருமானத்தை விட அதிகமான சொத்துகள் வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்குல், புவனேஸ்வர் மற்றும் பூரி மாவட்டத்தில் உள்ள பிபிலி ஆகிய இடங்களில் உள்ள ஏழு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இதன்போது மொத்தம் சுமார் ரூ.2.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் இருந்த இடங்கள்

  • அங்குலில் உள்ள இரு மாடி வீடு
  • புவனேஸ்வரில் டும்டுமா பகுதியில் உள்ள அடுக்குமாடி வீடு
  • பூரியில் உள்ள மற்றொரு குடியிருப்பு
  • அங்குல் சிக்ஷ்யகபடா பகுதியில் உள்ள உறவினரின் வீடு
  • அங்குலில் உள்ள முறைப்பீடார் வீடு
  • அங்குலில் உள்ள மற்றொரு இரு மாடி வீடு
  • அவரது அலுவலக அறை

தொடரும் பண எண்ணும் பணிகள்

சோதனைக்காக 26 காவல்துறை உறுப்பினர்கள் கொண்ட குழுவில் 8 டிஎஸ்பிகள், 12 இன்ஸ்பெக்டர்கள், 6 உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். சோதனையின் போது, சரங்கியின் அங்குல் வீட்டில் ரூ.1.1 கோடி மற்றும் புவனேஸ்வர் குடியிருப்பில் ரூ.1 கோடி பணம் மீட்கப்பட்டது. பணங்களை அதிகாரிகள் மக்கள் சாட்சி முன்னிலையில் சேகரித்தனர். சோதனையின் வீடியோக்களில், அதிகாரிகள் பல ஆயிரக் கணக்கான ரூ.500 நோட்டுக் கட்டுகளையும் சில ரூ.200, ரூ.100, ரூ.50 நோட்டுகளையும் எண்ணும் காட்சிகள் பதிவாகியுள்ளன. பண எண்ணும் பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?...
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கொட்டும் மழை.. சென்னையில் எப்படி?
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கொட்டும் மழை.. சென்னையில் எப்படி?...
உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்லோவாக உள்ளதா? - இத பண்ணுங்க!
உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்லோவாக உள்ளதா? - இத பண்ணுங்க!...
உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசதா!
உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசதா!...
தக் லைஃப் படத்தின் டிக்கெட் முன்பதிவு.. எப்போது ஆரம்பம் தெரியுமா?
தக் லைஃப் படத்தின் டிக்கெட் முன்பதிவு.. எப்போது ஆரம்பம் தெரியுமா?...
கோலிவுட் சினிமா.. ஜூன் மாதத்தில் இத்தனை படங்கள் ரிலீஸா?
கோலிவுட் சினிமா.. ஜூன் மாதத்தில் இத்தனை படங்கள் ரிலீஸா?...
அருணாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சி! நிலச்சரிவில் 7 பேர் உயிரிழப்பு!
அருணாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சி! நிலச்சரிவில் 7 பேர் உயிரிழப்பு!...
யூடியூப் ஷார்ட்ஸில் கூகுள் லென்ஸ் வசதி: ஈஸியா தகவல்களைப் பெறலாம்!
யூடியூப் ஷார்ட்ஸில் கூகுள் லென்ஸ் வசதி: ஈஸியா தகவல்களைப் பெறலாம்!...
பான் கார்டு குறித்து பலருக்கும் தெரியாத விஷயங்கள்!
பான் கார்டு குறித்து பலருக்கும் தெரியாத விஷயங்கள்!...
உப்புமாவுக்கு பதில் பொங்கல்! CM காலை உணவு மெனுவில் மாற்றம்..!
உப்புமாவுக்கு பதில் பொங்கல்! CM காலை உணவு மெனுவில் மாற்றம்..!...
மகனின் பட்டமளிப்பு விழாவிற்காக ஒன்று சேர்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா
மகனின் பட்டமளிப்பு விழாவிற்காக ஒன்று சேர்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா...