Corona Virus: இந்தியாவில் 1,300 ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. பாதுகாப்புடன் இருக்க WHO அறிவுறுத்தல்..!
Global Coronavirus Resurgence: உலகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. NB.1.8.1, JN.1, KP.2 போன்ற புதிய மாறுபாடுகள் பரவி வருகின்றன. WHO எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியாவிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவானோர் பூஸ்டர் டோஸ் எடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா (Corona) பரவல் மீண்டும் தாக்குதலை ஆரம்பிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அமெரிக்கா (America), சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து மற்றும் இந்தியா என பல்வேறு நாட்களில் கொரோனா பரவல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில், உலக சுகாராத நிறுவனமானது (World Health Organization) உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து கவலை தெரிவித்தது. பல நாடுகளில் கொரோனாவின் புதிய வகைகள் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, பொதுமக்கள் கவலையும், அச்சமும் கொண்டுள்ளனர். இருப்பினும், கடந்த கால வரலாற்றை ஒப்பிடும்போது, இன்னும் அந்த அளவிற்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தநிலையில், கொரோனாவின் புதிய வகைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி அறிவோம்.
புதிய வகை கொரோனா குறித்து எச்சரிக்கை:
உலக சுகாராத நிறுவனம் கொரோனாவின் பல ப்திய வகைகள் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளது. இவற்றில், NB.1.8.1, JN.1 மற்றும் KP.2 போன்றவை ஓமிக்ரானின் துணை வகைகளாகும். NB.1.8.1 என்ற புதிய வகை கொரோனா சீனா, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் கொரோனா NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய இரண்டு துணை வகைகள் இந்தியா உட்பட பல நாடுகளில் வேகமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் கொரோனா தொற்று விரைவாக அதிகரித்து வருகிறது.
உலக சுகாதார நிறுவனம் இப்போது NB.1.8.1 கண்காணிப்பு மாறுபாட்டின் பிரிவில் வைத்துள்ளது. மாறுபாடுகளின் மாறிவரும் வடிவத்தைக் கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் அதை கண்காணிப்பு மாறுபாட்டிலேயே வைத்துள்ளது.
இதுவரை எவ்வளவு பேர் பாதிப்பு..?
भारत में कोरोना के सक्रिय मामले: मई 2025 अपडेट#Corona #CoronaUpdate #COVID19India #HealthPrecaution #NB181 #LF7 #CovidPrecaution #IndiaHealth #HealthUpdate #Viral #viralpost #trending #hindinews #lalluramnews pic.twitter.com/pv5iQBJBBO
— Lallu Ram (@lalluram_news) May 29, 2025
2025 மே 29ம் தேதி மதியம் 1.30 நிலவரப்படி, இந்தியா முழுவதும் இதுவரை 1326 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 430 பேருக்கும், மகாராஷ்டிராவில் 385 பேருக்கும், கர்நாடகாவில் 126 பேருக்கும், குஜராத்தில் 64 பேருக்கும், தமிழ்நாட்டில் 69 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்கள்:
- பொது இடங்களுக்கு செல்லும்போது, நெரிசலான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். கட்டாயமாக செல்ல வேண்டிய அவசியம் இருந்தால், இந்த இடங்களுக்கு மாஸ்க் அணிந்து செல்வது. இதனால் நீங்கள் பாதிக்கப்பட்ட நபரைத் தவிர்க்கலாம், அப்படி இல்லையென்றால் உங்களிடம் இருந்து வேறு யாருக்கும் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.
- வெளியே சென்று வந்ததுடன் உங்கள் கைகளை தவறாமல் சுத்தம் செய்வது நல்லது. நீங்கள் வெளியில் இருந்து வீட்டிற்கு வரும்போதோ அல்லது வீட்டில் இருக்கும்போதோ, உங்கள் கைகளை சுத்தம் செய்வதன்மூலம் தொற்று ஏற்படுவதை தவிர்க்கலாம்.
- லேசான அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது. தேவைப்பட்டால் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை எடுத்துக்கொள்ளலாம்.