வடகிழக்கு மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை.. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி
Northeast Heavy Rains : வடகிழக்கு மாநிலங்களில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் நிலச்சரவு, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அசாம், சிக்கம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அசாம், ஜூன் 01 : கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழையால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்து கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேச கடற்கரைகளில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர். மிசோரம், அசாம் ஆகிய மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்களின் இயல்பை வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதோடு, பலரும் உயிரிழந்து உள்ளனர்.
கனமழையால் 30 பேர் பலி
என்டிடிவியின் தகவலின்பிடி, வடகிழக்கு மாநிலங்களில் பெய்த மழையால் இரண்டு நாட்களில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலம் குவாஹாத்தியில் ஒரே நாளில் நாட்களில் 111 மி.மீ மழை பெய்துள்ளது. 67 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. அசாமில் பெய்த கனமழையால் 12 மாவட்டங்களில் 60,000 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி ஐந்து பேர் இறந்தனர்.




ஐந்து இறப்புகளும் காம்ரூப் பெருநகர மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. குவஹாத்தியில் போண்டா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 9 பேர் உயிரிழந்தனர். அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு காமெங் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டததை அடுத்து, கார் சாலையில் அடித்துச் செல்லப்பட்டதில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்கள்
VIDEO | Assam: The Rukmini Gaon area in Guwahati has got inundated after rains causing inconvenience to commuters. #Guwahati #Rain #assamfloods pic.twitter.com/3jAk8pnyR8
— Press Trust of India (@PTI_News) June 1, 2025
கடந்த 24 மணி நேரத்தில் மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயா பகுதியில் 8 பேர் உயிரிழந்தனர். வடக்கு சிக்கிமின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் காரணமாக பிரதான சாலைகளில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. சிக்கிமில் 1,500 சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
மங்கன் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனம் கவிழுந்ததில் ஒருவர் உயிரிழந்தனர். மேலும், ஐந்து பேர் காணால் போயினர். கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகள் நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கும் மழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.