Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“SIR-ஐ காப்பாற்றியது யார்?” அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் இபிஎஸ் கேள்வி!

Anna University Harassment Case Verdict : சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த தீர்ப்பு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

“SIR-ஐ காப்பாற்றியது யார்?” அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் இபிஎஸ் கேள்வி!
எடப்பாடி பழனிசாமிImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 02 Jun 2025 13:18 PM

சென்னை,  ஜூன் 02 : சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் (Anna University Harassment Case) குற்றவாளி ஞானசேகரனுக்கு (accused gnanasekaran) 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  மேலும், அவருக்கு ரூ.90,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த தீர்ப்பு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்.இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு. பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் யார் இந்த சார் என்ற என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம்.

“SIR-ஐ காப்பாற்றியது யார்?”

FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு? சாரை காப்பாற்றியது யார்?

இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது” என குறிப்பிட்டிருந்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம்

யார் அந்த சார் சர்ச்சை குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ” தானும் அந்த பல்கலைக்கழக ஊழியர் என மாணவியை பயமுறுத்தவே ஃபோனில் பேசுவது போல நடித்துள்ளளார் ஞானசேகரன். அவர் ஃபோன் ஃபிளைட் மோடில் இருந்தது நிரூபணமாகியுள்ளது. குற்றத்தில் மேலும் ஒருவர் தொடர்பு இருப்பதாக இனி சொல்வது நீதிமன்றம் அவமதிப்பு செயல்” என இவ்வாறு கூறினார்.

“மேல்முறையீடு செய்வோம்”


ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் குறித்து பேசிய அவரது வழக்கறிஞர் பி.ஆர். ஜெயபிரகாஷ் நாராயணன் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட 30 ஆண்டுகால ஆயுள் தண்டனையை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்வோம். தீர்ப்பு ஆவணங்கள் கிடைத்தவுடன் நாங்கள் மேல்முறையீடு செய்வோம்” என்றார்.

சினிமாவில் தொடர்ந்து நடிக்க தைரியம் கொடுத்தது அதுதான்...
சினிமாவில் தொடர்ந்து நடிக்க தைரியம் கொடுத்தது அதுதான்......
முட்டை கறி சமைக்காததால் ஆத்திரம்... மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்
முட்டை கறி சமைக்காததால் ஆத்திரம்... மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்...
தவெக கல்வி விருது விழா.. மாணவர்களுக்கு பரிசளிக்கும் விஜய்
தவெக கல்வி விருது விழா.. மாணவர்களுக்கு பரிசளிக்கும் விஜய்...
3 படத்தின் ரிலீசுக்கு பிறகு 2 வருசம் பட வாய்ப்பே வரல...
3 படத்தின் ரிலீசுக்கு பிறகு 2 வருசம் பட வாய்ப்பே வரல......
இனி வெயில் கொளுத்த போகுது.. சென்னையில் எப்படி?
இனி வெயில் கொளுத்த போகுது.. சென்னையில் எப்படி?...
'ஆர்சிபிக்காக என் இளமையைக் கொடுத்திருக்கிறேன்' - விராட் கோலி
'ஆர்சிபிக்காக என் இளமையைக் கொடுத்திருக்கிறேன்' - விராட் கோலி...
18 ஆண்டுகள் காத்திருப்பு..! கோப்பையை ஏந்திய ஆர்சிபி...!
18 ஆண்டுகள் காத்திருப்பு..! கோப்பையை ஏந்திய ஆர்சிபி...!...
நீரிழிநோய் மற்றும் உயர் ரத்த அழுத்ததை குறைக்க உதவும் 5 பழக்கங்கள்
நீரிழிநோய் மற்றும் உயர் ரத்த அழுத்ததை குறைக்க உதவும் 5 பழக்கங்கள்...
'தக் லைஃப்' வெளியிட விரும்புகிறோம் - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை
'தக் லைஃப்' வெளியிட விரும்புகிறோம் - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை...
3 Wicket 3 ரன்கள்! கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்த அர்ஷ்தீப் சிங்!
3 Wicket 3 ரன்கள்! கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்த அர்ஷ்தீப் சிங்!...
அதைப் பார்த்தால் எனக்குப் பயம் - மணிகண்டன்!
அதைப் பார்த்தால் எனக்குப் பயம் - மணிகண்டன்!...