AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சேலத்தில் என்ன நடந்தது? பந்தல் போடலையா? வேலூர் பொதுக்கூட்டம் – தவெகவினரிடம் எஸ்பி கேள்வி

TVK Vijay visits Vellore : தவெக தலைவர் விஜய் வருகிற பிப்ரவரி 23, 2026 அன்று வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கும் நிலையில், தவெகவினரிடம் பந்தல் போடவில்லையா? சேலத்தில் என்ன நடந்தது தெரியுமா? என எஸ்பி கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலத்தில் என்ன நடந்தது? பந்தல் போடலையா? வேலூர் பொதுக்கூட்டம்  – தவெகவினரிடம் எஸ்பி கேள்வி
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Feb 2026 16:55 PM IST

சென்னை, பிப்ரவரி 17 : சேலத்தை (Salem) தொடர்ந்து வேலூரில் வருகிற பிப்ரவரி 23, 2026 அன்று நடைபெறவிருக்கும் தவகெ தலைவர் விஜய்யின் (Vijay) பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பா நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் வயதனாவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் பாதுகாப்பு நலன் கருதி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்க்குமாறு அக்கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் வேல்முருகன் அறிவுறுத்தியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாகி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். அ்த வகையில் வருகிற பிப்ரவரி 23, 2026 அன்று தவெக தலைவர் விஜய் வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் தவகெ பொதுக்கூட்டம்

தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் வேலூருக்கு அருகில் பள்ளிக்கொண்ட அகரம் சேரி என்ற பகுதியில் நடைபெறவிருக்கிறது. இதற்காக அந்த பகுதியில் அமைந்துள்ள திடலை நிர்வாகிகள் சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமனிடம் தவெக சார்பில் பிப்ரவரி 17, 2026 அன்று கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. கே.சி வேணுகோபால் தலைமையில் முக்கிய ஆலோசனை..

இந்த நிலையில், திடலை ஆய்வு செய்த எஸ்பி சிவராமன், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தவெகவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சேலத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் வெயிலினால் என்ன நடந்தது தெரியுமா? மைதானத்தில் பந்தல் போடவில்லையா? என கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலளித்த தவெகவினர், மதியம் 12 முதல் 1 மணிக்குள் நிகழ்வு முடிந்து விடும் என்பதால் பந்தல் அமைக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ குழு அமைக்கிறோம் என பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேலூர் மாவட்ட செயலாளர், விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு விரைவில் அனுமதி கிடைத்துவிடும். காவல்துறையின் விதிமுறைகளை 100 சதவிகிதம் கடைபிடிப்போம் என உறுதியளித்துள்ளோம். மக்களின் பாதுகாப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன. 5 சட்டமன்ற தொகுதிகளுக்காக நடைபெறும் இந்த மக்கள் சந்திப்புக்கு 33 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுயிலும் 5,000 பேர் வீதம் மொத்தம் 25,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

இதையும் படிக்க : 9 நியோ டைடல் பார்க்.. 25 ஆயிரம் பேருக்கு வேலை.. பட்ஜெட்டில் அறிவிப்பு.. லிஸ்டில் உங்க ஊர் இருக்கா!

மினி மருத்துவமனை

மேலும் திடலில் குடிநீர் தொட்டில்கள், ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 50 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் கொண்ட மினி மருத்துவமனை அமைக்கப்படும். மேலும் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும். குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் கூட்டத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்