சேலம்: இரண்டாவது திருமண முயற்சியில் தந்தை: கழுத்தை அறுத்த மகன் கைது..!
Salem Son Attacks Father: சேலம் மாவட்டம், சூரமங்கலத்தைச் சேர்ந்த 65 வயதான செல்வகுமார், இரண்டாவது திருமணத்திற்காக நாளிதழில் விளம்பரம் செய்ததால், அவரது மகன் தமிழழகன் தாக்கினார். வாக்குவாதம் முற்றி, தந்தை மகனைத் தாக்கியதையடுத்து, ஆத்திரமடைந்த மகன் தந்தையின் தலையிலும் கழுத்திலும் கத்தியால் வெட்டினார்.

சேலம் ஜூன் 06: சேலத்தில் (Salem Crime) இரண்டாவது திருமணத்திற்கு நாளிதழில் விளம்பரம் செய்த 65 வயதான செல்வகுமாரை, அவரது மகன் தமிழழகன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்குவாதம் முற்றி, தந்தை முதலில் தாக்க, அதில் ஆத்திரமடைந்த மகன் தலையில் தந்தையை தாக்கி, கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வகுமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். வணிக நஷ்டம், கடன் சிக்கலால் மன அழுத்தத்தில் இருந்த தமிழழகன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டாவது திருமணத்துக்கான முயற்சியில் ஈடுபட்ட தந்தை
சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில், இரண்டாவது திருமணத்துக்கான முயற்சியில் ஈடுபட்ட தந்தையை அவரது மகன் கொடூரமாக தாக்கிய பரிதாப சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 65 வயதான செல்வகுமார், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி. அவரது மனைவி சண்முகவள்ளி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனநல பாதிப்பால் தூக்கிட்டு தற்கொலை செய்தார். பிறகு, இரு மகன்களான தமிழழகன் (23) மற்றும் கிரிவெங்கடேஷுடன் (17) செல்வகுமார் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.
தந்தை செல்வகுமார் முதலில் மகனை தாக்கியதாக தகவல்
தான் தனியாக இருப்பதை உணர்ந்த செல்வகுமார், இரண்டாவது திருமணத்துக்காக நாளிதழ்களில் வரன் தேடும் வகையில் விளம்பரம் செய்திருந்தார். இதை எதிர்த்து அவரது மகன் தமிழழகன், தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 2025 ஜூன் 05 நேற்று காலை இந்த வாக்குவாதம் கடுமையான மோதலாக மாறியதாக போலீசார் கூறுகின்றனர். முற்றிய தகராறில், தந்தை செல்வகுமார் முதலில் மகனை இரும்பு பைப் ரிங்சால் தாக்கியதாக தெரிகிறது.
தந்தையை கத்தியால் கழுத்தை அறுத்த மகன்
இதனால் ஆத்திரமடைந்த தமிழழகன், தந்தையின் தலையில் அதே ரிங்சால் தாக்கியதுடன், பின்னர் கத்தியால் கழுத்தையும் அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வகுமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழழகனை கைது செய்தனர். தமிழழகனுக்கு வணிகத்தில் நஷ்டம் ஏற்பட்டதோடு கடன் சிக்கலும் இருந்ததோடு, தந்தையிடம் பணம் கேட்டும் வந்ததாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொலை குற்றங்கள்
2025 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து ஏற்படுவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை உருவாகியுள்ளது. இந்தக் குற்றச் செயல்கள் பெரும்பாலும் குடும்ப தகராறுகள், சொத்து தகராறுகள், காதல் தோல்வி மற்றும் பழிவாங்கும் நோக்கிலான தாக்குதல்களை மையமாகக் கொண்டுள்ளன.