Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பயணிகள் கவனத்திற்கு: ரெயில்வே அட்டவணை வெளியீட்டு நேரத்தில் மாற்றம்!

Railway Chart: மத்திய ரெயில்வே வாரியம், ரெயில் புறப்படும் 8 மணி நேரத்திற்கு முன் பயணிகள் அட்டவணை வெளியிடப்படும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் காத்திருப்போர் பட்டியல் பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைக்கும், கடைசி நேர குழப்பங்கள் தவிர்க்கப்படும். புதிய முன்பதிவு அமைப்பும் விரைவில் செயல்படுத்தப்படும்.

பயணிகள் கவனத்திற்கு: ரெயில்வே அட்டவணை வெளியீட்டு நேரத்தில் மாற்றம்!
மாதிரி புகைப்படம் Image Source: Pinterest
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 30 Jun 2025 06:52 AM

தமிழ்நாடு ஜூன் 30: ரெயில்வே பயணிகள் (Indian Railway)  அட்டவணை (Railway Chart) தற்போது ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரங்களுக்கு முன்பே வெளியிடப்படும் என மத்திய ரெயில்வே வாரியம் (Central Railway Board) அறிவித்துள்ளது. இதுவரை 4 மணி நேரத்திற்கு முன்பே வெளியிடப்பட்டதால் பயணிகள் சிக்கல்களை சந்தித்தனர். புதிய முறை, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு டிக்கெட் நிலையை முன்கூட்டியே அறிய உதவும். கடைசி நேர பதற்றம் தவிர்க்கப்படும். தொலைதூர மற்றும் புறநகர் பயணிகளுக்கு இது பயனளிக்கும். மேலும், புதிய முன்பதிவு அமைப்பும் விரைவில் அறிமுகமாகும். மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த மாற்றத்தைக் கோரிய ரெயில்வே வாரிய ஆலோசனையை ஏற்று, படிப்படியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

8 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் அட்டவணை வெளியிடப்படும்

ரெயில்வே பயணிகள் அட்டவணை தற்போது ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரங்களுக்கு முன்பே வெளியிடப்படும் என மத்திய ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதுவரை இந்த அட்டவணை ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்புதான் வெளியிடப்பட்டு வந்தது. இது பயணிகளுக்கு கடைசி நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

புதிய முறையின்படி, பயணிகள் தங்களுடைய டிக்கெட்டின் நிலையை முன்னதாகவே தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களுக்கான நிலையை அறிந்து, பயணத்திற்கான மாற்று ஏற்பாடுகளை நேரத்தில் செய்ய இது உதவிகரமாக இருக்கும்.

புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அதிக நன்மை ஏற்படும்

மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த மாற்றத்தைக் கோரிய ரெயில்வே வாரிய ஆலோசனையை ஏற்று, படிப்படியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தொலைதூர பயணிகள், புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அதிக நன்மை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும், ரெயில்வே முன்பதிவு முறையையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிமிடத்திற்கு 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை உருவாக்கக்கூடிய புதிய பயணிகள் முன்பதிவு அமைப்பு, இவ்வருட இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வினி வைஷ்ணவ் தற்போது இந்தியாவின் மத்திய ரெயில்வே அமைச்சர் ஆகப் பணியாற்றுகிறார். அவர் 2021 ஜூலை 7 அன்று இந்தப் பொறுப்பை ஏற்றார்.

பயணிகள் அட்டவணையில் மாற்றம்

மத்திய ரெயில்வே வாரியம்

மத்திய ரெயில்வே வாரியம் என்பது இந்திய ரெயில்வேயின் முக்கிய நிர்வாக அமைப்பாகும். இது ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ரெயில்வே சேவைகள், கட்டமைப்பு, பணியாளர் நலன், நிதி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை இவ்வாரியம் வகிக்கிறது.

1905 ஆம் ஆண்டு இந்திய ரெயில்வே வாரிய சட்டத்தின் கீழ் இது உருவாக்கப்பட்டது. 1951 இல் ரெயில்வே வாரியத்தில் தலைவரும் சேர்க்கப்பட்டார். 2019 இல் மத்திய அரசு இந்த வாரியத்தை மறுசீரமைத்து, உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஐந்தாகக் குறைத்தது.

இந்திய ரெயில்வே 18 மண்டலங்களாகப் பிரிப்பு

தற்போது ரெயில்வே வாரியம் தலைமை நிர்வாக அதிகாரி (CEO), உறுப்பினர் (மூலதனம் மற்றும் கட்டமைப்பு), உறுப்பினர் (இயக்கம் மற்றும் வணிக மேம்பாடு), உறுப்பினர் (மின்சார இயக்கம் மற்றும் ரோலிங் ஸ்டாக்), உறுப்பினர் (நிதி) ஆகிய ஐந்து முக்கிய உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்திய ரெயில்வே 18 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒரு பொதுப் மேலாளர் தலைமையில் செயல்படுகிறது.