AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொடைக்கானலுக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்… சுற்றுலாப்பயணிகள் கண்டு உற்சாகம்…

Kodaikanal's Star Lake: கொடைக்கானல், சாரல் மழையுடன் குளிர்ந்த சூழலுக்கு கோடை விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட், நட்சத்திர ஏரி போன்ற இடங்களில் சுற்றிய வருகின்றனர். சுற்றுலா வளர்ச்சியுடன் வியாபாரிகளுக்கு சிறந்த வருமானம் கிடைக்கின்றது.

கொடைக்கானலுக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்… சுற்றுலாப்பயணிகள் கண்டு உற்சாகம்…
கொடைக்கானலுக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 28 Apr 2025 10:46 AM IST

கொடைக்கானல் ஏப்ரல் 28: கொடைக்கானல் (kodaikanal), வெயிலின் சூழலில், சாரல் மழையுடன் குளிர்ந்ததாக காணப்படுகிறது. கோடை விடுமுறையினைத் (Summer Holiday) தொடங்கிய நிலையில், கேரளா மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட், குணா குகை போன்ற இடங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. இயற்கையின் அழகை அனுபவிக்கும் போது, தாய்லாந்து, பாங்காங் இடங்களில் காணப்படும் பர்ப்பிள் பாண்ட் ஹேரோன் பறவையும் வந்துள்ளது. கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சி அதிகரித்து, வியாபாரிகளுக்கு சிறந்த வருமானம் கிடைத்துள்ளது.

கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகளின் வரவேற்பு

கொடைக்கானல், தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பரபரப்பான சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு அளிக்கின்றது. தமிழகம் முழுவதும் வெயில் திடுக்கிடும் காலத்தில், கொடைக்கானலில் சாரல் மழை பெய்து குளிர்ந்த சூழ்நிலை தற்போது இங்கே உருவாகியுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகை

கோடை விடுமுறை தொடங்கியதால், கொடைக்கானலுக்கு உற்றிலும் அண்டை மாநிலங்களான கேரளா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். 2025 ஏப்ரல் 27 நேற்று பகல் நேரத்தில் திடீரென பெய்த சாரல் மழையை தொடர்ந்து, நகரின் முக்கிய இடங்களான அப்சர்வேட்டரி, அண்ணாசாலை மற்றும் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் கனமழை பெய்து, சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழையால் உற்சாகமடைந்த மக்கள்

இதை அடுத்து, சுற்றுலா பயணிகள் உற்சாகமாக மழையில் நனைந்து ஏரிச்சாலையை சுற்றி உலாவினர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட், பைன்பாரஸ்ட், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களிலும் மக்களின் கூட்டம் அதிகரித்தது.

அதிகரித்து வரும் வெளிநாட்டு பறவைகளின் படையெடுப்பு

கொடைக்கானல், ஐரோப்பாவின் சீதோஷ்ண நிலைகளைப் போன்ற சூழ்நிலையைக் கொண்டுள்ளது, இதனால் பல காலங்களில் இடம் பெயர்ந்து வரும் பறவைகள் கொடைக்கானலுக்கு வருவதை நாம் காண முடிகிறது. அதேபோல், தாய்லாந்து, பாங்காங் மற்றும் மலை பிரதேசங்களில் காணப்படும் பர்ப்பிள் பாண்ட் ஹேரோன் என்ற வெளிநாட்டு பறவை, நட்சத்திர ஏரியில் உலாவிக்கொண்டிருந்தது. இதனைப் பார்த்த சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் நீண்ட நேரம் ரசித்தனர்.

சுற்றுலா வளர்ச்சி அதிகரிப்பு

கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட், நட்சத்திர ஏரி போன்ற இடங்களில் சுற்றிய வருகின்றனர். சுற்றுலா வளர்ச்சியுடன் வியாபாரிகளுக்கு சிறந்த வருமானம் கிடைக்கின்றது.

தொடர்ந்து வரும் விடுமுறைகள் காரணமாக, கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார மலை கிராமங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், கோடை சீசன் முழுவதும் கொடைக்கானல் மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிறந்த வருமானத்தை அளித்துள்ளது.

Follow Us