Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’என்னை வளர்த்தது முருகன்.. துணிச்சல் தந்தது முருகன்’ – மதுரை முருகன் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு

Murugan Maanadu Madurai : மதுரை மாவட்டத்தில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசினார். அப்போது, இந்துக்களை சீண்டாதீர்கள் எனவும் கடவுளை கேலி செய்துவிட்டு அதை  மதசார்பின்மை என்று கூறுகிறார்கள் என்று பவன் கல்யாண் தெரிவித்தார்.

’என்னை வளர்த்தது முருகன்..  துணிச்சல் தந்தது முருகன்’ – மதுரை முருகன் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு
பவன் கல்யாண்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 Jun 2025 20:56 PM

மதுரை, ஜூன் 22 : மதுரை மாவட்டத்தில் பிரம்மாண்டாக முருக பக்தர்கள் (Murugan Maanadu) மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் (Pawan Kalyan), “மதுரைக்கும் முருகனுக்கும் நெருக்கம் அதிகம். என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன் என்னை வளர்த்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன். நாட்டின் நம்பிக்கைக்கு அழிவு இல்லை. அதை யாராலும் அழிக்க முடியாது. கலாச்சாரம் மிகவும் ஆழமானது. நம்மை அசைக்க யாராலும் முடியாது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நமது அறம் ஆழமாக உள்ளது. இது தான் தெய்வீக பூமியின் பலம். முருகனின் வடிவத்தில் நமது அறம் தொடர்ந்து தலைக்கிறது. எல்லாரையும் சமமாக பார்ப்பது அறம். தீயவர்களை வதம் செய்வது அறம். அதை செய்வதே புரட்சித் தலைவர். உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன். ஒரு கட்சி தலைவர் கேட்கிறார் ஏன் முருகன் மாநாட்டை தமிழகத்தில் நடத்துகிறீர்கள்.

முருகன் மாநாட்டில் பவன் கல்யாண்

இதன் மூலம் பிரிவினை ஏற்படுத்துகின்றனர். நாளை சிவபெருமான், அம்மனை கேட்கலாம். இந்த சிந்தனை மிகவும் ஆபத்தானது. எனது நம்பிக்கையை கொண்ட எனக்கு உரிமை உள்ளது. அதை கேட்க நீங்கள் யார்? அதை நீங்கள் கேள்வி கேட்க முடியுமா?

என் மதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதை செய்யாதீர்கள். இந்துக்களை சீண்டி பார்க்காதீர்க்ள. சாது மிரண்டால் காது கொள்ளாது. முருகனை பற்றி கேள்வி கேட்கும் நீங்கள், அரேபியாவில் இருந்து வந்த மதத்தை பற்றி கேள்வி கேட்க முடியுமா?

அதற்கான துணிச்சல் இருக்கா? என் கடவுளை கேலி செய்துவிட்டு அதை மதசார்பின்மை என்கிறார்கள். அரசமைப்பு கொடுத்து கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி இவ்வாறு பேசுகின்றனர். நம்மை காப்பாற்றும் முருகனை நாம் காப்பாற்றத் தேவையில்லை. ஆனால் நன்றியை காட்ட வேண்டும். சிலர் இங்கு நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்.

”இந்துக்களை சீண்டாதீர்கள்”

நமக்கு நிறத்தில் எந்த பாகுபாடும் இல்லை.  ஆனால், இங்கு கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் உள்ளது. நம்மை இணைக்கும் முருகனை சீண்டிப் பார்க்கிறது ஒரு கூட்டம்.   கடவுளை கேலி செய்துவிட்டு அதை  மதசார்பின்மை என்கிறார்கள். அவர்களால் மற்ற மதங்களை பற்றி பேசுகிறார்கள்” என்று கூறினார்.

முன்னதாக பேசிய  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ”நாம் நினைத்து பார்க்காத அளவிற்கு பக்தர்கள் திரண்டுள்ளனர். முருகப் பெருமானின் புகழை பரப்பும் இந்த நிகழ்வை பார்த்து பலரும் மலைத்துப் போயுள்ளனர் தமிழ் மண்ணின் கலாச்சாரம் மாரிவிடக் கூடாது என்பதற்காக தான் இந்த மாநிலம்” என்றார். மேலும், தெலுங்கில் நயினார் நாகேந்திரன் குறித்து மேடையில் பேசினார். அதாவது, பவன் காரு என குறிப்பிட்டு மேடையில் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில், குலுங்கி குலுங்கி பவன் கல்யாண் சிரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.