Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மதுரையில் முருகன் மாநாடு.. தமிழிசை செல்ல இருந்த விமானத்தில் கோளாறு.. என்னாச்சு?

Murugan Maanadu Madurai : சென்னையில் இருந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரை செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, தமிழிசை உள்ளிட்ட பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழிசை சௌந்தரராஜன் மதுரை செல்ல தாமதமாகும் என கூறப்படுகிறது.

மதுரையில் முருகன் மாநாடு.. தமிழிசை செல்ல இருந்த விமானத்தில் கோளாறு.. என்னாச்சு?
தமிழிசை சௌந்தரராஜன்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 Jun 2025 15:35 PM

சென்னை, ஜூன் 22 : சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளளது. இந்த விமானத்தில்  பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan) பயணம் மேற்கொள்ள இருந்தார். மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் (Murugan Maanadu) கலந்து கொள்வதற்காக இந்த விமானத்தில் தமிழிசை செல்ல இருந்த நிலையில், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, தமிழிசை உள்ளிட்ட பயணிக்ள மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழிசை சௌந்தரராஜன், மதுரை செல்ல தாமதமாகி உள்ளது. முன்னதாக, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மதுரைக்கு வர இருந்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட தாமதம் ஆகியது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் தாமதமாக புறப்பட்டது. இதனை அடுத்து, அவர் பிற்பகல் 2 மணியளவில் மதுரைக்கு வந்தடைந்தார்.

தமிழிசை செல்ல இருந்த விமானத்தில் கோளாறு

இந்த சூழலில், தற்போது தமிழிசை சௌந்தரராஜன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், அவர் மதுரை செல்ல தாமதமாகி உள்ளது. முன்னதாக, சென்னையில் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது, துரைமுருகன் போன்ற அரசியல் தலைவர்கள் இந்து மரபுகளை ஏற்றுக்கொள்ளாததற்காக கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்துக்களை அவமதித்ததாக திமுகவை அவர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், “முருகன் மாநாட்டை அரசியல் மாநாடு என்று எதை வைத்து சொல்கிறார்கள். தமிழ் கடவுள் முருகன் என்று சொல்கிறார்கள். தமிழுக்காக தான் வாழ்கிறோம் என்று சொல்லும் நீங்கள் (திமுக) ஒருமுறையாவது தமிழ் கடவுள் முருகனின் கோயிலுக்கு சென்று இருக்கிறீர்களா.

ஆறுபடை வீடுகளில் ஒன்றுக்கு சென்று இருக்கிறீர்களா. இந்து மதத்தின் விழாக்களில் பங்கேற்று உள்ளீர்களா. ஏன் இந்த பாராபட்சம்? இரண்டாம் தர மக்களாக உங்கள் மனதில் அவர்களை நீங்கள் நினைத்து வைத்துள்ளீர்கள். இந்த மாநாட்டை இந்து முன்னணி நடத்துகிறது. இருப்பினும், நாங்கள் கலந்து கொள்கிறோம். இந்த உணர்வு மேலோங்க வேண்டும் என்ற அடிப்படையில் கலந்து கொள்கிறோம்” என்றார்.

பேட்டி அளித்த தமிழிசை சௌந்தரராஜன்

முருக பக்தர்கள் மாநாடு:

மதுரையில் முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு 2025 ஜூன் 22ஆம் தேதியான இன்று நடக்கிறது. மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாலை 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது. மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள அம்மா திடலில் நடக்கும் மாநாட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அதோடு, அரசியல் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். மாநாடு முக்கிய நிகழ்வாக மாநாடு அரங்கிலும், வெளியிலுமாக 5 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது என ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.