Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

கன்னியாகுமரி: கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

Kanyakumari Collectorate: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாமில், 70 வயதான தாணம்மாள் என்ற மூதாட்டி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். மீன் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மன வேதனையில் இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி: கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
மூதாட்டி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 17 Jun 2025 10:01 AM

கன்னியாகுமரி ஜூன் 17: கன்னியாகுமரி (Kanyakumari) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் (District Collector’s Office) குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொள்ள மூதாட்டி ஒருவர் வந்தார். அவர் திடீரென மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதை போலீசார் தடுக்க தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். விசாரணையில் அவர் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த தாணம்மாள் (Dhanammal) (வயது 70) எனவும், மீன் வியாபாரம் (Fish trade) செய்பவர் என்றும் தெரிய வந்தது. வியாபாரம் செய்ய மாறொரு நபர் தடை செய்ததால் மனவேதனையில் தற்கொலை முயற்சி செய்ததாக கூறினார். தாணம்மாளை 108 ஆம்புலன்ஸில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த திடீர் சம்பவம் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூதாட்டி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2025 ஜூன் 16 ஆம் தேதி நேற்று குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்தனர். அவர்களது மனுக்களை அளிக்க வந்தவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மன வேதனையில் தீக்குளிக்க முயற்சி

இந்த சூழலில், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த தாணம்மாள் என்ற 70 வயது மூதாட்டி ஒருவரும் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென, தான் உடலோடு வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து, தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். சம்பவ இடத்திலிருந்த போலீசார் உடனடியாக தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர்.

போலீசார் தடுத்து நடவடிக்கை

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், தாணம்மாள் அந்த பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருவது மற்றும் அந்த வியாபாரத்தில் மற்றைய ஒருவர் அவரை தடுப்பதற்காக துன்புறுத்தி வருவதாகவும் தெரியவந்தது. இதனால் மனவேதனையில் ஆழ்ந்ததால்தான் தற்கொலை முயற்சிக்கு முயன்றதாக அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டியின் திடீர் தற்கொலை முயற்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு

தருமபுரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஜெயராமன் என்ற 52 வயது விவசாயி திடீரென தீக்குளித்தார்.
நில பத்திரம் தொடர்பான புகாரில் நடவடிக்கை இல்லாததால் விரக்தியில் இந்த முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட அவரை அருகிலிருந்தோர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

60% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த அவர் 2025 ஜூன் 10 அன்று உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அரசு செயல்முறைகளை குறித்த கேள்விகளை எழுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 36 நாட்கள்.. கணவருக்கு விஷம் கொடுத்து கொன்ற மனைவி
திருமணமான 36 நாட்கள்.. கணவருக்கு விஷம் கொடுத்து கொன்ற மனைவி...
மதுரை முருகன் மாநாட்டில் அரசியல் இருக்காது - நயினார் நாகேந்திரன்
மதுரை முருகன் மாநாட்டில் அரசியல் இருக்காது - நயினார் நாகேந்திரன்...
ராமநாதசுவாமி கோவிலில் பரபரப்பு: 500 பேர் திரண்டு போராட்டம்...
ராமநாதசுவாமி கோவிலில் பரபரப்பு: 500 பேர் திரண்டு போராட்டம்......
4 நாள் டெஸ்ட் போட்டியை களமிறக்கும் ஐசிசி.. ஏன் தெரியுமா..?
4 நாள் டெஸ்ட் போட்டியை களமிறக்கும் ஐசிசி.. ஏன் தெரியுமா..?...
நடுக்கடலில் சுராவுக்கு முத்தமிட்ட இளம் பெண் - வைரல் வீடியோ!
நடுக்கடலில் சுராவுக்கு முத்தமிட்ட இளம் பெண் - வைரல் வீடியோ!...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்? வெளியான 3டி படம்..!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்? வெளியான 3டி படம்..!...
ஒரே நேரத்தில் உருவான இரு காற்றழுத்த தாழ்வு பகுதி
ஒரே நேரத்தில் உருவான இரு காற்றழுத்த தாழ்வு பகுதி...
விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை... அப்டேட் இதோ
விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை... அப்டேட் இதோ...
வெறும் ரூ.10,499-க்கு அறிமுகமான ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி!
வெறும் ரூ.10,499-க்கு அறிமுகமான ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி!...
தாமிரபரணி நதிக்கரையில் சனி பகவான்.. இந்த கோயில் தெரியுமா?
தாமிரபரணி நதிக்கரையில் சனி பகவான்.. இந்த கோயில் தெரியுமா?...
தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க முடியாது...
தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க முடியாது......