AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவில் பரபரப்பு.. கொடியேற்றத்தின் போது ஹீலியம் கேஸ் பலூன்கள் வெடித்து விபத்து.. 4 பேர் படுகாயம்!

Gas Balloon Explosion: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாக் கொடியேற்றத்தின் போது எதிர்பாராதவிதமாக ஹீலியம் கேஸ் பலூன்கள் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது. பட்டாசுப் பொறிகள் பட்டு நிகழ்ந்த இந்த விபத்தில், சென்னையைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவில் பரபரப்பு.. கொடியேற்றத்தின் போது ஹீலியம் கேஸ் பலூன்கள் வெடித்து விபத்து.. 4 பேர் படுகாயம்!
வேளாங்கண்ணி திருவிழா
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 30 Aug 2026 07:30 AM IST

வேளாங்கண்ணி, ஆகஸ்ட் 30: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பெருவிழா பாரம்பரிய முறைப்படி கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாகத் தொடங்கியது. விழா உற்சாகத்துடன் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்பாராதவிதமாக அரங்கேறிய விபத்துச் சம்பவம், அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களிடையே பெரும் பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : “கோயிலுக்கும் திமுகவினருக்கும் என்ன சம்பந்தம்?”.. அறங்காவலர் குழு நியமனம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பளார்!

கொடியேற்றத்தின் போது நிகழ்ந்த விபத்து:

வேளாங்கண்ணி பேராலயப் பெருவிழாவை முன்னிட்டுத் தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் மற்றும் நிர்வாகிகளின் பங்கேற்புடன் புனிதக் கொடி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு இடையே கொடிமர ஏற்ற நிகழ்வு நடைபெற்றது. கொடியேற்றத்தின் போது பக்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் ஆகாயத்தில் வானவேடிக்கை பட்டாசுகளை வெடித்தும், ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட மாபெரும் பலூன்களைப் பறக்கவிட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் இருந்து பறந்து வந்த தீப்பொறிகள் எதிர்பாராதவிதமாகப் பறக்கவிடப்பட இருந்த ஹீலியம் வாயு பலூன்கள் மீது பட்டு பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறின.

பக்தர்கள் காயம் மற்றும் மருத்துவமனை அனுமதி:

பலூன்கள் தீப்பிடித்து பெரிய நெருப்புப் பிழம்பாக வெடித்ததில், கொடிமரத்தின் அருகே நின்றுகொண்டிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்து அங்குமிங்கும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த கலைச்செல்வன், ரமேஷ், விஜய் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரிச்சர்ட் ஆகிய நான்கு பேர் தீக்காயமடைந்தனர். இதில் சென்னையைச் சேர்ந்த கலைச்செல்வன் மற்றும் ரமேஷ் ஆகியோருக்குக் கைகளிலும் முகத்திலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை மீட்ட காவல்துறையினரும் விழாக்குழுவினரும் உடனடியாக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : “எந்த திட்டமானாலும் விவசாய நிலத்தை எடுத்தாக வேண்டும்”.. அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் சர்ச்சை.. சிபிஎம் சண்முகம் கடும் கண்டனம்!!

தொடரும் விசாரணை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்:

சம்பவம் தொடர்பாக வேளாங்கண்ணி காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த 11 நாள் பெருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ச்சியாகக் குவிவார்கள் என்பதால், பேராலயப் பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பட்டாசு வெடிக்கும் இடங்கள் மற்றும் கேஸ் பலூன்கள் பயன்பாடு குறித்துக் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உத்தரவிட்டுள்ளன.

Follow Us