நீலகிரியில் 2 பேரை கொன்ற புலி.. புலியை பிடிக்க களமிறங்கிய கும்பி யானைகள்!
நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதியில் அடுத்தடுத்து 2 பேர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலி தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புலியின் நடமாட்டத்தை கண்காணித்து, அதனை பிடிக்கும் நடவடிக்கையாக இரண்டு கும்கி யானைகள் தற்போது களமிறக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதியில் அடுத்தடுத்து 2 பேர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலி தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புலியின் நடமாட்டத்தை கண்காணித்து, அதனை பிடிக்கும் நடவடிக்கையாக இரண்டு கும்கி யானைகள் தற்போது களமிறக்கப்பட்டுள்ளன. தற்போது இரண்டு கும்கி யானைகள், சிறப்புக் குழுவினர், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தெர்மல் ட்ரோன்களின் உதவியுடன் புலியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கும்கி யானைகள் மட்டுமன்றி 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினரும் அந்த இடத்தில் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மயக்க ஊசி செலுத்தக்கூடிய துப்பாக்கிகள் உடன் அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
