Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கரூர் கொடூர சம்பவம்…2 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை!

Karur Stampede Incident: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சம்பவத்தின்போது, போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு போக்குவரத்து உதவி ஆய்வாளர்களிடம் சி. பி. ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், முக்கிய நபர்களிடம் விசாரணை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

கரூர் கொடூர சம்பவம்…2 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவலர்களிடம் விசாரணை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 10 Feb 2026 08:45 AM IST

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரை பயணத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு மேற்பார்வை செய்து வருகிறது. இந்த நிலையில், கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சம்பவத்தன்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 2 போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 2:30 மணி நேரம் நடைபெற்ற இந்த தீவிர விசாரணையில், கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது, போக்குவரத்தை சரி செய்யும் பணியில் எத்தனை போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

போக்குவரத்து காவலர்களிடம் கிடுக்கிப்பிடி கேள்வி

கூட்ட நெரிசல் சம்பவத்தை அடுத்து, காயமடைந்தவர்களை மீட்டு செல்வதற்காக எத்தனை அவசர ஆம்புலன்சுகள் வந்தன என்பது தொடர்பாக பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பி இருந்தனர். இந்த விசாரணை தொடரும் எனவும், மேலும் முக்கிய நபர்களிடம் விசாரணை நடைபெறும் எனவும் சிபிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மாதம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இரு முறை ஆஜராகி இருந்தார்.

மேலும் படிக்க: குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் மீண்டும் எப்போது நடைபெறும்? வெளியான அறிவிப்பு

விஜயின் பிரசார வாகனத்துடன் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

அப்போது, அவரிடம் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றது உங்களுக்கு தெரியுமா. இது குறித்த தகவலை யார் உங்களிடம் கூறியது. உயிரிழப்பு நிகழ்ந்த போது நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர். இதே போல, விஜய் பயன்படுத்திய பிரச்சார வாகனத்தை அதன் ஓட்டுருடன் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்ட வேலுசாமிபுரத்துக்கு கொண்டு வந்து வாகனத்தை முன், பின்னாக இயக்கி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் விசாரணை

இதே போல, அப்போதைய சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் 11 காவலர்களிடம் தனித் தனியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர். தற்போது, கரூரில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்திற்காக விஜய் பயன்படுத்தி இருந்த பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்த நிலையில், தற்போது இரு போக்குவரத்து காவலர்களிடம் விசாரணையை நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க: ரயில் திட்டங்கள் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்