Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அண்ணாமலைக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி? பணிகள் மும்மரம்.. அடுத்து என்ன?

Annamalai New Posting: பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு தேசிய அளவிலான பதவி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்ட நிலையில், அவருக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக பல தரப்பில் கருத்துக்கள் நிலவு வருகிறது.

அண்ணாமலைக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி? பணிகள் மும்மரம்.. அடுத்து என்ன?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Jun 2025 14:12 PM

அண்ணாமலை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை சமீபத்தில் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் தொடர்ச்சியாக கூறி வந்த நிலையில் தற்போது இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாஜக மாநில தலைவர் பொறுப்பிற்கு அண்ணாமலையை நீக்கிவிட்டு புதிதாக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அப்போது தமிழகத்திற்கு வருகை தந்த அமைச்சர் அமித்ஷா இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு அறிவித்தார். அதனைத் தொடர்ந்து வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்கும் என உறுதி செய்யப்பட்டது.

அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே இருந்த கருத்து மோதல்:

2021 ஆம் ஆண்டு அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருந்து ஒன்றாக சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது அப்போது பல ஆண்டுகள் கழித்து பாஜக நான்கு இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இடையே அடிக்கடி கருத்து மோதல்கள் நிலவை வந்தது. இருவரும் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது எதிரும் புதிருமான பதில்களை தெரிவித்து வந்தனர். பின்னர் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் அதிமுக:

2026 சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என பல்வேறு யூகங்கள் வெளியானது. ஆனால் பாஜக மாநில தலைவர் பொறுப்பில் அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைக்க மாட்டோம் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதனால் அண்ணாமலையை நீக்கி நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தந்த போது புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்தார்.

அண்ணாமலைக்கு தேசிய பதவி:

அதனைத் தொடர்ந்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படும் என பல்வேறு கருத்துக்கள் வெளியானது. பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அண்ணாமலைக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என கருத்துக்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கப்படும் என பல்வேறு யூகங்கள் வெளியான நிலையில் அது உண்மை இல்லை என தெரிய வந்தது. ஆனால் தற்போது தேசிய அளவிலான பதவி வழங்கப்படுவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

முன்னாள் மாநில பாஜக தலைவர்களும் தேசிய பொறுப்புகளும்:

இதற்கு முன்னதாக பாஜக மாநில தலைவராக எல். முருகன் பதவியில் இருந்தார். அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்பு அண்ணாமலை புதிய பாஜக மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அப்போது எல் முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதேபோல் பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பதவிகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே பாஜக மாநில தலைவர் பதவிகளில் வகித்த முன்னாள் தலைவர்களுக்கு தேசிய அளவிலான பதவிகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அண்ணாமலைக்கும் அது வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.