Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“தேமுதிகவுக்கு ராஜ்சயபா சீட் தருவது அதிமுகவின் கடமை” பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

Tamil Nadu Rajya Sabha Election : தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டிய அதிமுகவின் கடமை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், அரசியலில் நம்பிக்கை முக்கியம் என்றும் எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“தேமுதிகவுக்கு ராஜ்சயபா சீட் தருவது அதிமுகவின் கடமை” பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
பிரேமலதா விஜயகாந்த் - எடப்பாடி பழனிசாமி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 May 2025 14:04 PM

சென்னை, மே 29 : தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் (Rajya Sabha election) கொடுக்க வேண்டிய அதிமுகவின் கடமை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா (DMDK Premalatha Vijayakanth) விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், நம்பிக்கையின் அடிப்படையில், கமல்ஹாசனுக்கு திமுக மாநிலங்களவை சீட் கொடுத்துள்ளதை வரவேற்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்உ ள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரின் பதவிக்காலம் 2025 ஜூலை 24ஆம் தேதி முடிவடைகிறது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், அப்துல்லா, சண்முகம், அதிமுகவைச் சேர்ந்த சந்திரவேகரன் ஆகியோரின் பதவிக் காலம் முடிவடைகிறது. இந்த 6 ஆறு இடங்களுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

“தேமுதிகவுக்கு ராஜ்சயபா சீட் தருவது அதிமுகவின் கடமை”

இந்த 6 இடங்களுக்கு ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படுகிறது.  இதில் திமுக கூட்டணியில் 4 பேரும், அதிமுக கூட்டணியில் 2 பேரும் போட்டியிட உள்ளனர். இந்த 6 இடங்களிலும் யார் யார் போட்டியிடுவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இதற்கிடையில், திமுக சார்பில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களை கட்சி தலைமை 2025 மே 28ஆம் தேதியான நேற்று அறிவித்தது.  அதன்படி, பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம்,  கமல்ஹாசன் ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

இன்னும், அதிமுக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் முக்கிய கருத்தை கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ” தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவது அதிமுகவின் கடமை.

அரசியலில் நம்பிக்கை முக்கியம். அதன்படி தான் கமல்ஹாசன் அவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதை நான் வரவேற்கிறேன். 2024 நாடாளுமன்ற தேர்தலிலேயே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்சயசா சீட் தருவது உறுதி செய்யப்பட்டது தான். எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தையை நிரூபிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2025 மே 29ஆம் தேதியான இன்று நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாநிலங்களவை சீட் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை 2 எம்.பி சீட்டுகள் உள்ளன. இதில் ஒன்றில் அதிமுக வேட்பாளர் நிறுத்தப்படுவார். மற்றொரு சீட் தான் தற்போது இழுபறியில் உள்ளது.

அதாவது, கடந்தமுறை நடந்த தேர்தலில் பாமக அன்புமணி, அதிமுக சார்பில் சந்திரசேகரன் ஆகியோர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது, பாமக அதிமுக கூட்டணியில் இல்லாததால், மீண்டும் அன்புமணிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல, 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி ஒன்று வழங்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அப்போது அப்படி எதுவும் பேசப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். இதனால், பாமகவுக்கு சீட் வழங்கப்படுமா அல்லது தேமுதிகவுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரிசர்வ் டே இல்லை..! மழை பெய்தால் MIக்கு ஆப்பு! GTக்கு வாய்ப்பு?
ரிசர்வ் டே இல்லை..! மழை பெய்தால் MIக்கு ஆப்பு! GTக்கு வாய்ப்பு?...
கமல் ஹாசனுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை மிரட்டல்
கமல் ஹாசனுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை மிரட்டல்...
"நீட் மட்டும் தான் உலகமா? ஸ்ட்ரெஸ் வேண்டாம்" விஜய் அட்வைஸ்
நகைக் கடன் விதிகள் தளர்த்தப்படுமா? ஆர்பிஐக்கு பரிந்துரை
நகைக் கடன் விதிகள் தளர்த்தப்படுமா? ஆர்பிஐக்கு பரிந்துரை...
தமிழகத்தில் 4 புதிய கல்லூரிகள்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் 4 புதிய கல்லூரிகள்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...
90ஸ் கிட்ஸின் சூப் சாங்... காதல் கசக்குதையா உருவான கதை தெரியுமா?
90ஸ் கிட்ஸின் சூப் சாங்... காதல் கசக்குதையா உருவான கதை தெரியுமா?...
பாகிஸ்தானில் 90 நாட்கள்.. உளவு பார்த்த நபர் அதிரடி கைது!
பாகிஸ்தானில் 90 நாட்கள்.. உளவு பார்த்த நபர் அதிரடி கைது!...
மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி!
மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி!...
எலிமினேட்டரில் வெளியேறும் அணி எது..? மும்பை - குஜராத் இன்று மோதல்
எலிமினேட்டரில் வெளியேறும் அணி எது..? மும்பை - குஜராத் இன்று மோதல்...
சூடாகும் உலகம்.. நிலச்சரிவில் புதைந்த சுவிட்சர்லாந்து கிராமம்!
சூடாகும் உலகம்.. நிலச்சரிவில் புதைந்த சுவிட்சர்லாந்து கிராமம்!...
மாணவர்களுக்கு விருது விழா.. பரிசுகளை வழங்கும் விஜய்!
மாணவர்களுக்கு விருது விழா.. பரிசுகளை வழங்கும் விஜய்!...