AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிரித்துப் பேசி சீரழித்த வீட்டு உரிமையாளர்: கதறிய மாணவி… சிக்கிய மர வியாபாரி!

Coimbatore Case: கோவையில் 11-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட மர வியாபாரி ரவிக்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நடன வீடியோக்கள் மூலம் மாணவியிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, வீட்டில் யாரும் இல்லாதபோது அத்துமீறியுள்ளார். மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரவிக்குமாரைச் சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிரித்துப் பேசி சீரழித்த வீட்டு உரிமையாளர்: கதறிய மாணவி… சிக்கிய மர வியாபாரி!
கோப்புப்படம் Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 06 Mar 2026 10:42 AM IST

கோயம்புத்தூர் ரத்தினபுரி பகுதியில் மர வியாபாரம் செய்து வரும் ரவிக்குமார் என்பவர், தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 11-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாணவியுடன் சினிமா குத்துப்பாடல்களுக்கு நடனமாடிப் பழகிய ரவிக்குமார், அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவிக்குத் தேவையற்ற தொல்லைகளை அளித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என அந்தச் சிறுமியை அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மாணவியின் கழுத்துப் பகுதியில் வலி ஏற்பட்டதைக் கண்டு அவரது சகோதரர் விசாரித்தபோது, ரவிக்குமாரின் அத்துமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

கோவையில் அதிர்ச்சி: மாணவியிடம் அத்துமீறிய வீட்டின் உரிமையாளர்

கோயம்புத்தூர், ரத்தினபுரி பகுதியில் மர வியாபாரம் செய்து வரும் ரவிக்குமார் என்பவரது வீட்டில், 15 வயது மதிக்கத்தக்க 11-ஆம் வகுப்பு மாணவி தனது குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறார். ஒரே வளாகத்தில் குடியிருந்து வந்ததால், அந்த மாணவி ரவிக்குமாரின் குடும்பத்தாருடன் சகஜமாகப் பழகி வந்துள்ளார். ரவிக்குமாரும் அந்தச் சிறுமியிடம் நகைச்சுவையாகப் பேசி நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

Also Read: மனைவியின் நடத்தையில் சந்தேகம் – கழுத்தை அறுத்து கொன்ற கணவன்; தர்மபுரியில் அதிர்ச்சி

சமூக வலைதளங்களில் வைரலாகும் நடன வீடியோக்கள்

சினிமா பாடல்களுக்கு நடனமாடுவதில் ஆர்வம் கொண்ட அந்த மாணவியுடன் சேர்ந்து, ரவிக்குமாரும் குத்துப்பாடல்களுக்கு நடனமாடி அதனை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இத்தகைய வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் பரவி வருகின்றன. இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, அந்தச் சிறுமியிடம் தவறான முறையில் நடக்க ரவிக்குமார் திட்டமிட்டுள்ளார்.

தனிமையைப் பயன்படுத்தி நேர்ந்த அத்துமீறல்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரவிக்குமாரின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை அறிந்து அங்குச் சென்ற மாணவியிடம் அவர் அத்துமீறி நடந்துள்ளார். மாணவிக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபட்டு அவருக்குத் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் வெளியே தெரிந்தால் ஆபத்து ஏற்படும் எனச் சிறுமியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி மிகுந்த அச்சத்துடன் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

உடல்நலக் குறைவும் புகாரும்

அன்று இரவு அந்தச் சிறுமி மிகவும் சோர்வாகவும், கழுத்து வலியால் அவதிப்படுவதையும் கண்ட அவரது சகோதரர் காரணம் கேட்டுள்ளார். அப்போது ரவிக்குமார் தனக்குக் கொடுத்த தொல்லைகள் குறித்து மாணவி அழுதுகொண்டே விவரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உடனடியாக கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த போலீசார், ரவிக்குமார் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Follow Us