Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கடும் குளிருடன் பனிமூட்டம்.. சில்லென மாறிய சென்னை.. பிற மாவட்டங்களில் எப்படி?

Tamil Nadu Weather Update: ஜனவரி 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வாஹமினிலையே நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், நல்ல கனமழை பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 7 செ.மீ. மழை பதிவானது.

கடும் குளிருடன் பனிமூட்டம்.. சில்லென மாறிய சென்னை.. பிற மாவட்டங்களில் எப்படி?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Jan 2026 06:15 AM IST

வானிலை நிலவரம், ஜனவரி 13, 2026: குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஜனவரி 13, 2026 தேதியான இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளை ஜனவரி 14, 2026 அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை:

இதனைத் தொடர்ந்து, ஜனவரி 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வாஹமினிலையே நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், நல்ல கனமழை பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 7 செ.மீ. மழை பதிவானது. அதனைத் தொடர்ந்து மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.

மேலும் படிக்க: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரபல ரவிடி வெட்டிக்கொலை.. அதிர்ச்சியூட்டும் பின்னணி.. 8 பேர் கைது..

இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலையும் இரவு நேர வெப்பநிலையும் பெரிதான மாற்றமின்றி குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஜனவரி 13ஆம் தேதி முதல் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், குறைந்தபட்ச வெப்பநிலை வரக்கூடிய நாட்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் தொடரும் குளிர்:

பகல் நேர வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும் சூழலில், இரவு நேரங்களில் வெப்பநிலையின் தாக்கம் மேலும் குறைந்து காணப்படும். வரக்கூடிய நாட்களில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாலை முதல் அதிகாலை வரை கடும் குளிர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம்…களமிறங்கிய சிறப்பு குழு- புகார் எண்கள் அறிவிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை பதிவாகி வருகிறது. அதிகாலை நேரங்களில் கடந்த இரண்டு முதல் மூன்று நாட்களாக கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சென்னையைப் பொறுத்தவரையில், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகி வருகிறது. வரக்கூடிய நாட்களில் இது மேலும் குறையக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.