சென்னை மெரினாவில் பரபரப்பு: திருநங்கையிடம் தவறாக நடந்த கூலி தொழிலாளி கொலை
Chennai Marina Murder: சென்னை மெரினா கடற்கரையில் கூலித் தொழிலாளி வெங்கடேசன் கட்டையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஒரு திருநங்கை மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெங்கடேசன் திருநங்கையை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் அவர்கள் வெங்கடேசனை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை ஜூன் 17: சென்னை மெரினா கடற்கரையில் (Chennai Marina Beach) கூலி தொழிலாளி வெங்கடேசன் (Worker Venkatesan Murder) கட்டையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். திருநங்கை மற்றும் அவரது நண்பர் தாக்கியதாக கூறப்படுகின்றது; இருவரும் பின்னர் கைது (Trangender, One Person Arrested) செய்யப்பட்டனர். வெங்கடேசன் திருநங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. வெங்கடேசனை ரத்தக்காயங்களுடன் கண்ட ஊர்காவல் படை வீரர் முதலில் உதவி செய்தார். எனினும் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் மெரினா பகுதியிலும், பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட சம்பவம்: இரண்டு பேர் கைது
சென்னை மெரினா கடற்கரையில் திருநங்கையிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படும் கூலி தொழிலாளர், கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் நேதாஜி சிலை அருகே ஒருவர் ரத்தக்காயங்களுடன் கிடந்ததை ரோந்து பணியில் இருந்த ஊர்க்காவல் படைவீரர் சீனிவாசன் கவனித்து, அவரிடம் விசாரணை நடத்தினார்.
உயிருக்கு போராடிய அந்த நபர், தனது பெயர் வெங்கடேசன் (43) என்றும், திருநங்கை ஒருவர் மற்றும் அவரது நண்பர் ஒருவர் சேர்ந்து தன்னை தாக்கிவிட்டதாகவும் கூறினார். உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.




மெரினா போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக மெரினா போலீசார் விசாரணை நடத்தினர். அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம், திருவல்லிக்கேணி சேர்ந்த 17 வயது திருநங்கை மற்றும் ராயப்பேட்டை சேர்ந்த ராகேஷ் குமார் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். ராகேஷ் குமார் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
திருநங்கையிடம் தவறாக நடந்த கூலி தொழிலாளர்
விசாரணையில், வெங்கடேசன் திருநங்கையிடம் தவறாக நடக்க முயன்றதும், பின்னர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. அதில் இருந்து தப்பிக்க முயன்றபோது இதனால் ஏற்பட்ட தகராறில், அந்த இருவரும் வெங்கடேசனை கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். கொல்லப்பட்ட வெங்கடேசன் சூளைதிடீர் நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி எனவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மெரினா பகுதியிலும், சமூக வட்டாரத்திலும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை 2025 ஜூன் மாதம் நடந்த கொலை
2025 ஜூன் மாதத்தில் சென்னை நகரில் சென்ட்ரலில் திருட்டு முயற்சிக்கிடையில் காவலரை தாக்கிய சுராஜ் மற்றும் பிரதீப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெரம்பூரில் காதல் தகராறில் வாலிபர் தனது காதலியை கொன்று, பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், ஒரு பெண்ணை கள்ளமருந்து கலந்த பானம் குடிக்க வைத்து படுக்கையில் கொலை செய்த 27 வயது மருத்துவரும் கைது செய்யப்பட்டார். இதில் அவர் மேல் இருந்த பாலியல் புகாரும் பின்னணி காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.