AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் பொளக்கும் வெயில்.. 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பல்வேறு இடங்களில் நேற்று மிதமான மழை பதிவானது. இதேபோல், இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பொளக்கும் வெயில்.. 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Jun 2026 06:25 AM IST

ஜூன் 10, 2026: தமிழகத்தில் தொடர்ந்து அதிகப்படியான வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 40.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல், சென்னை நுங்கம்பாக்கத்தில் 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 38.7 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 38.2 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மதுரையில் 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றும், ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக வெப்ப அசௌகரியம் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பொளக்கும் வெயில்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பல்வேறு இடங்களில் நேற்று மிதமான மழை பதிவானது. இதேபோல், இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மது போதையில் அரக்கனாக மாறிய அண்ணன்.. சென்னையில் தூங்கிக்கொண்டிருந்த தம்பி அடித்து கொலை.. பதறவைக்கும் பின்னணி!

தென் தமிழகத்தில் தொடரும் கனமழை:

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகி வருகிறது. ஜூன் 10ஆம் தேதியான இன்று நெல்லை, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையில் 2500 புதிய பணியிடங்கள்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஜூன் 11ஆம் தேதி நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜூன் 12ஆம் தேதி கோவை, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 13ஆம் தேதி முதல் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இந்த நிலை ஜூன் 15ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us