Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விசிக, காங்கிரஸின் திடீர் அணுகுமுறை ஏன்? பாமக தலைவர் அன்புமணி கேள்வி

Anbumani Ramadoss Slams DMK: பாமக சமூக ஊடக கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், திமுகவே உண்மையான எதிரி எனவும், அதற்கெதிரான பிரச்சாரத்தை வலியுறுத்தினார். விசிக, காங்கிரஸ் தலைவர்களின் ராமதாஸ் மீதான திடீர் அன்பை திமுக சூழ்ச்சியாகக் குறிப்பிட்டார். சங்கமித்ரா கூட்டத்தில் கலந்துகொண்டார்.

விசிக, காங்கிரஸின் திடீர் அணுகுமுறை ஏன்? பாமக தலைவர் அன்புமணி கேள்வி
அன்புமணி ராமதாஸ்Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 28 Jun 2025 14:17 PM

சென்னை ஜூன் 28: பாட்டாளி மக்கள் கட்சி சமூக ஊடக பிரிவு கூட்டத்தில், திமுகவையே உண்மையான எதிரியாகக் கண்டுபிடித்து அதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையை அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) வலியுறுத்தினார். ராமதாஸ் மீது விசிக தலைவர் திருமாவளவன் (VCK Leader Thirumavalavan) மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் திடீரென காட்டும் அன்பு ஏன் என்று கேள்வி எழுப்பினார். இது திமுகவின் சூழ்ச்சி எனக் கூறிய அவர், மக்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார். 2025 ஜூலை 25 முதல் நவம்பர் 21 வரை நடைபெறவுள்ள 100 நாட்கள் நடைபயணத்தின் முன்னோட்டமாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன. சமூக ஊடகங்களில் பாமகவின் செய்திகளை விளம்பரப்படுத்தும் வகையில் வீடியோ, ரீல்ஸ், YouTube சேனல் உள்ளிட்ட பல முயற்சிகள் திட்டமிடப்பட்டன. இந்த கூட்டத்தில் அன்புமணியின் மகளும் எம்பியாக உள்ள சங்கமித்ரா கலந்து கொண்டார்.

பட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே சமீப காலமாக கருத்து மோதல் வலுப்பெற்று வருகிறது. இந்த உட்பகை காரணமாக, கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் இருபிரிவாகப் பிளவடைந்து, ஒரு தரப்பினர் ராமதாஸ் ஆதரவாளர்களாகவும், மற்றொரு தரப்பினர் அன்புமணியின் ஆதரவாளர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த மோதல் நிலையில், பாமகவின் தலைமை நிர்வாகிகளுள் 90 சதவீதம் பேர் தன்னை ஆதரிக்கின்றனர் என்று ராமதாஸ் கூறியுள்ளார். அதேசமயம், அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை புறக்கணித்து, ராமதாஸ் தனது விருப்பப்படி புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இதற்கு பதிலடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டோர் செல்லாது என்று அன்புமணி அறிவித்து, அவர்களையும் செயல்படச் செய்து வருகிறார்.
இதன் விளைவாக கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் பெருகி வருவதோடு, பாமகவின் நிலைப்பாடு வரும் சட்டமன்ற தேர்தலில் கடுமையாக பாதிக்கப்படும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் பாமக சமூக ஊடக பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். அப்போது அவர், “திமுக தான் பாமகவிற்கு உண்மையான எதிரி. அதனால் திமுகவிற்கு எதிராக நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும்” எனக் கூர்ந்தார்.

அதே நேரத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் அவரது கட்சியினர் திடீரென கொண்டுள்ள அன்பு, சந்திப்பு போன்றவை சீரிய கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “வன்னியருக்கான உரிமைகளை எதிர்த்து போராடியவர்கள் இன்று டாக்டர் ராமதாஸ் அவர்களை புகழ்ந்து பேசுவது ஏன்?” என்றார். இவை அனைத்தும் திமுகவின் குருதியான அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அன்புமணி, இவற்றை மக்கள் ஆழமாக யோசிக்க வேண்டும் என்றார்.

மேலும், ஜூலை 25 முதல் நவம்பர் 21 வரை தமிழக முழுவதும் நடைபெறவுள்ள ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணம்’ குறித்த ஆலோசனைகளும் கூட்டத்தில் இடம் பெற்றது. 100 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பான விவரங்களை பட்டியலிடுவது, தொகுதி வாரியான பிரச்சனைகள் குறித்து அறிந்து செயல்திட்டங்களை வகுப்பது, சமூக ஊடகங்கள், வீடியோக்கள், ரீல்ஸ், YouTube சேனல் வழியாக தகவல்களை பகிர்வது என பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுடன் அவரது மகளும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான சங்கமித்ரா பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.