Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்? வானிலை ரிப்போர்ட்..

Northeast Monsoon: குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, குமரி கடல்,  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்–இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்? வானிலை ரிப்போர்ட்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Nov 2025 14:40 PM IST

வானிலை நிலவரம், நவம்பர் 25, 2025: மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நிக்கோப்பாரில் இருந்து கிழக்குத்–தென்கிழக்கு சுமார் 740 கிலோமீட்டர் தொலைவிலும், கார்நிக்கோபாரில் இருந்து கிழக்கு–தென்கிழக்கு 880 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைபெற்றுள்ளது. இது மெதுவாக மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி:

மேலும், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, குமரி கடல்,  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்–இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை–இந்தியா பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்.. சுற்றுப்பயணம் பாதியில் நிறுத்தம்!!

இதன் காரணமாக 2025 நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களில் கடலோர தமிழகத்தில் சில இடங்களில் தரைக்காற்று 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:

அதேபோல், நவம்பர் 27, 2025 அன்று தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும்,

நவம்பர் 28, 2025 அன்று தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழை — அதாவது ஆரஞ்சு எச்சரிக்கை — விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை: இடிந்து விழுந்த வீடுகள்.. வெள்ள அபாய எச்சரிக்கை!!

சென்னையில் எப்போது மழை இருக்கும்?

2025 நவம்பர் 29 அன்று புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 30 அன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவிவரும் நிலையில், வரவிருக்கும் 29 மற்றும் 30 ஆம் தேதி கனமழை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.