சென்னை பள்ளிக்கரணையில் பெரும் தீ விபத்து.. 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதம்..
சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த குப்பைக் கிடங்கிற்கு அருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தீ வேகமாக பரவியதால் அங்கு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த குப்பைக் கிடங்கிற்கு அருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தீ வேகமாக பரவியதால் அங்கு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிந்து சேதமடைந்த வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் என்றும், அவை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பல தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தீ விபத்தால் அப்பகுதியில் அடர்ந்த கரும்புகை பரவியுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தகவல்கள் அப்டேட் செய்யப்படுகிறது..