AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India A Team: இலங்கை வீரர்களுடன் வாக்குவாதம்.. வைபவ் சூர்யவன்ஷி விளையாட தடையா?

Vaibhav Sooryavanshi: முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி (Indian A Team) 265 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இலங்கை ஏ அணியும் 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான சூப்பர் ஓவரில் இந்திய அணி தோல்வியடைந்தது.

India A Team: இலங்கை வீரர்களுடன் வாக்குவாதம்.. வைபவ் சூர்யவன்ஷி விளையாட தடையா?
வைபவ் சூர்யவன்ஷிக்கு தடையா?
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 Jun 2026 20:52 PM IST

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்புத் தொடரில் (Tri Series) இந்தியா ‘ஏ’ அணியில் 15 வயதே ஆன இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார். இத்தொடரின் 4வது போட்டியில் நேற்று அதாவது 2026 ஜூன் 15ம் தேதி இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கிடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி (Indian A Team) 265 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இலங்கை ஏ அணியும் 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான சூப்பர் ஓவரில் இந்திய அணி தோல்வியடைந்தது. சூப்பர் ஓவர் தோல்விக்கு பிறகு, இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி இலங்கை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது காணப்பட்டது.

ALSO READ: வைபவ் சூர்யவன்ஷியிடம் வம்பு.. இலங்கை வீரர்களுடன் மோதல்.. என்ன நடந்தது?

தள்ளுமுள்ளுவில் முடிந்த வாக்குவாதம்:

ஆரம்பத்தில் வாக்குவாதமாக ஆரம்பித்த பிரச்சனையானது,  இலங்கை வீரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளுவில் ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து, இலங்கை வீரர்களுடன் சண்டையிட்டதற்காக வைபவிற்குத் தடை விதிக்கப்படுமா அல்லது அபாரதம் விதிக்கப்படுமா என்ற கேள்விகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பான கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொள்வோம்.

வைபவ் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்குமா?

கிரிக்கெட் கட்டுப்பாட்டின் விதிகளின்படி, இந்த விவகாரம் மிகவும் தீவிரமானதாக இருக்கக்கூடும் என்றாலும், கைகலப்புகள் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டால் ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும். பொதுவாக, ‘ஏ’ தொடர்களில் ஐசிசி ஒழுங்கு நடவடிக்கைகளுக்குத் தீர்ப்பளிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதுபோன்ற போட்டிகளுக்குப் போட்டி அதிகாரிகளை நியமிப்பதில்லை. எனவே, வைபவ் சூர்யவன்ஷிக்கு எந்தத் தடையையும் அல்லது அபராதத்தையும் எதிர்கொள்ள வாய்ப்பில்லை. தற்போது, ​​இந்தத் தடை குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

ALSO READ: இந்திய ஏ அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுமா? சமன்பாடு என்ன..?

வாக்குவாதத்தை தொடங்கிய இலங்கை வீரர்கள்:

கிடைத்த தகவலின்படி, இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ இடையிலான சூப்பர் ஓவருக்குப் பிறகு, இலங்கை வீரர் விஷன் ஹலம்பகே, வைபவை திட்டியதாக கூறப்படுகிறது. ஹலம்பகே, வைபவிடம், “ஆட்டம் முடிந்துவிட்டது… இப்போது நீங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்” என்று கூறினார். இதைக் கேட்ட வைபவ், கடும் கோபமடைந்து, இலங்கை வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட தனியாகச் சென்றார்.

சூப்பர் ஓவரில் இந்தியா ‘ஏ’ அணி ஏமாற்றமளிக்கும் வகையில் விளையாடியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 16 ரன்கள் எடுத்தது. இலக்கைத் துரத்திய இந்தியா ‘ஏ’ அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

Follow Us