Table Tennis: விதிமீறல் குற்றச்சாட்டு.. டேபிள் டென்னிஸ் அமைப்பை தடை செய்த மத்திய அமைச்சகம்!
Table Tennis Federation: இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA), டேபிள் டென்னிஸ் கூட்டமைப்புடன் (TTFI) கலந்தாலோசித்து ஒரு புதிய தற்காலிகக் குழுவை அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி கூட்டமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் அமைக்கப்படும் வரை, இந்தக் குழு டேபிள் டென்னிஸ் தொடர்பான அனைத்துப் பணிகளையும் கவனித்துக் கொள்ளும்.
விரைவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் (Asian Games 2026) வரவுள்ள நிலையில், இந்தியாவில் டேபிள் டென்னிஸ் நிர்வாகம் தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தும், டேபிள் டென்னிஸை (Table Tennis) நிர்வகிக்க ஒரு தற்காலிகக் குழுவை அமைக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கும் அறிவுறுத்தியுள்ளது. டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பால் உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்த முடியவில்லை என்று விளையாட்டு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ள நிலையில், தற்போது தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்த 2026ம் ஆண்டின் தொடக்கத்தில், மத்திய விளையாட்டு அமைச்சகம் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பிற்கு விளக்கம் கோரி நோட்டீஸை அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸுக்கான பதிலும் திருப்திகரமாக இல்லாததால் இந்த அதிரடி தடை முடிவு எடுக்கப்பட்டது.
ALSO READ: 5 ஐசிசி கோப்பைகளை வென்ற அணியின் மோசமான நிலை.. மீண்டும் பின்னடைவு.. எந்த அணி தெரியுமா?
விரைவில் தற்காலிக குழு:
இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA), டேபிள் டென்னிஸ் கூட்டமைப்புடன் (TTFI) கலந்தாலோசித்து ஒரு புதிய தற்காலிகக் குழுவை அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி கூட்டமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் அமைக்கப்படும் வரை, இந்தக் குழு டேபிள் டென்னிஸ் தொடர்பான அனைத்துப் பணிகளையும் கவனித்துக் கொள்ளும். விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பையும், வெளிப்படையான தேர்வு செயல்முறையையும் உறுதி செய்வதில் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது. அதனால்தான் அவர்கள் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் மேக்னா அஹ்லாவத் ஆவார். இவர்தான் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேக்னா அஹ்லாவத் தலைவர் பொறுப்பை ஏற்றார். இவர் ஹரியானா சட்டமன்ற உறுப்பினர் துஸ்மந்த் சௌதாலாவின் மனைவி ஆவார்.




இருப்பினும், கடந்த பல மாதங்களாக கூட்டமைப்பு பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தேசிய அணி தேர்வு குறித்து டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் மணிகா பத்ரா தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அதன்பிறகு, நிலைமை மிகவும் சிக்கலானது. இந்த ஆண்டு ஜனவரியில், நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டின் பேரில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் முன்னாள் வீரருமான கம்லேஷ் மேத்தாவை கூட்டமைப்பு இடைநீக்கம் செய்தது.
ALSO READ: ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை.. முழு அட்டவணை விவரம்!
இருப்பினும், மேத்தா அந்த முடிவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பின்னர், நீதிமன்றத்தின் தீர்ப்பால் அவரது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு, உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தாததற்காக டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பை (TTFI) மத்திய அரசு தடை செய்தது. இதன் விளைவாக, நாட்டில் டேபிள் டென்னிஸை நிர்வகிக்கும் பொறுப்பு ஒரு தற்காலிகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.