IPL 2027: ஹர்திக் மீது லுக் வைத்த லக்னோ… இந்த அதிரடி வீரரை விட்டுக்கொடுக்கிறதா?
Hardik Pandya replaces Nicholas Pooran: மும்பை இந்தியன்ஸ் அணி 2015-ல் ஹர்திக் பாண்ட்யாவை 10 லட்சம் ரூபாய் அடிப்படை விலைக்கு வாங்கியது. அதனை தொடர்ந்து, ஹர்திக் 2021 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து, அணியின் கேப்டனாக நியமித்தது. அவரது தலைமையில், குஜராத் டைட்டன்ஸ் முதல் சுற்றிலேயே பட்டத்தை வென்றது.
ஐபிஎல் 2027 (IPL 2027) தொடருக்காக இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு கடும் போட்டி நிலவுவதாகத் தெரிகிறது. அவரைப் பரிமாற்றம் செய்வது குறித்த செய்திகள் 2 நாட்களுக்கு ஒருமுறை வெளிவருகின்றன. சில சமயங்களில் ஹர்திக் பாண்ட்யா பெயர் இந்த அணியுடனும், சில சமயங்களில் அந்த அணியுடனும் இணைக்கப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியாகவில்லை. தற்போது ஒரு அறிக்கையின்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யாவை (Hardik Pandya) வாங்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சமீபத்தில் ரிஷப் பண்டை விடுவித்துள்ளது. மேலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து குல்தீப் யாதவையும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. ஆனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஒரு நல்ல அனுபவமிக்க கேப்டன் தேவை. அந்தத் தேவையை ஹர்திக் பாண்ட்யா பூர்த்தி செய்ய வாய்ப்புள்ளது.
ALSO READ: ஹர்திக் பாண்ட்யாவை கொடுக்க மறுக்கும் மும்பை? விடாது ஆர்வம் காட்டும் கொல்கத்தா!
எனவே, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யாவை வாங்க ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. டி20 கிரிக்கெட்டில், வேகமாகப் பந்துவீசி, குறைந்த ரன்களில் அணிக்கு வெற்றியை தேடி தரும் ஹர்திக் பாண்ட்யா போன்ற ஒரு தரமான இந்திய ஆல்-ரவுண்டரைக் கண்டுபிடிப்பது கடினம். எனவே, லக்னோ அணி ஹர்திக் பாண்ட்யாவை வாங்க கடுமையாக முயற்சிக்கிறது.




நிக்கோலஸ் பூரனுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா:
ஹர்திக் பாண்ட்யாவை அணியில் சேர்ப்பதற்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் திட்டம் வகுத்து வருவதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. ஹர்திக்கிற்காக நிக்கோலஸ் பூரனை விடுவிக்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தயாராக இருப்பதாகக் காட்டியுள்ளது. நிக்கோலஸ் பூரனின் தக்கவைப்புத் தொகை அல்லது சம்பள மதிப்பு மிகவும் அதிகம். லக்னோ அணிக்கு நிக்கோலஸ் பூரனுக்காக ரூ.21 கோடி வழங்கி வருகிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரை வர்த்தகம் செய்தால், ஹர்திக்கை வாங்குவது எளிதாகிவிடும். இதற்காக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிக்கோலஸ் பூரன் மற்றும் ரூ.10 கோடி வழங்கப்பட்டதாகப் பேசப்படுகிறது. கடந்த 2026 ஐபிஎல் சீசனில் நிக்கோலஸ் பூரனின் செயல்பாடு சிறப்பாக இல்லை. எனவே, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அவரை விடுவிக்க நினைப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த வர்த்தகம் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
ஹர்திக் பாண்ட்யாவின் ஐபிஎல் வாழ்க்கை:
மும்பை இந்தியன்ஸ் அணி 2015-ல் ஹர்திக் பாண்ட்யாவை 10 லட்சம் ரூபாய் அடிப்படை விலைக்கு வாங்கியது. அதனை தொடர்ந்து, ஹர்திக் 2021 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து, அணியின் கேப்டனாக நியமித்தது. அவரது தலைமையில், குஜராத் டைட்டன்ஸ் முதல் சுற்றிலேயே பட்டத்தை வென்றது.
ALSO READ: சிஎஸ்கேவின் அடுத்த பயிற்சியாளர் இவரா? மெக்கல்லத்தை வரவைக்க திட்டம்போடும் எம்.எஸ்.தோனி..!
பின்னர் 2023-ல், ஹர்திக் பாண்ட்யா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் 2024-ல், மும்பை இந்தியன்ஸ் அணி அவரை வர்த்தக சாளரத்தின் மூலம் அணியில் சேர்த்தது. அவருக்கு தலைமைப் பொறுப்பும் வழங்கப்பட்டது. ஆனால் 2024 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. இதன் காரணமாக, அவரை அணியிலிருந்து விடுவிப்பது குறித்துப் பேச்சுக்கள் எழுந்துள்ளன.