Asian Athletics Championships 2025: ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 24 பதக்கங்களுடன் 2ம் இடம்.. இந்திய வீரர்களை வாழ்த்திய பிரதமர் மோடி!
Prime Minister Narendra Modi: 2025 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்தம் 24 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, 8 தங்கம், 10 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. இந்த சாதனை 2017க்குப் பிறகு இந்தியாவின் சிறந்த செயல்திறனாகும். சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. பிரதமர் மோடி இந்த வெற்றியை வாழ்த்தியுள்ளார்.

தென் கொரியாவின் குமியில் நடைபெற்ற 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் (Asian Athletics Championships 2025) இந்த முறை இந்திய குழு சிறப்பாக செயல்பட்டது. இந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்திய விளையாட்டு வீரர்கள் மொத்தமாக 24 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இது 2017ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவிண் சிறந்த செயல்திறன் இதுவாகும். 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் 8 தங்கம், 10 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். இதனால், இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது. சீனா 19 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் இந்த சாதனைக்காக அனைத்து வீரர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து:
India is proud of our contingent for their stupendous performance at the recently held 2025 Asian Athletics Championships in South Korea. The hardwork and determination of every athlete were clearly visible throughout the tournament. Best wishes to the athletes for their future… pic.twitter.com/VB8VXIFy7L
— Narendra Modi (@narendramodi) June 2, 2025




இந்திய வீரர்கள், வீராங்கனைகளை வாழ்த்தி பிரதமர் மோடி பதிவிட்டதாவது, “தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வீரர்களின் சிறந்த செயல்திறனால் இந்தியா பெருமை கொள்கிறது. சாம்பியன்ஷிப் முழுவதும் ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பும் தெளிவாகத் தெரிந்தது. விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் செயல்திறன் எப்படி..?
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதி நாளான நேற்று 2025 ஜூன் 1ம் தேதி இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முன்னதாக, ஆண்களுக்கான 5,000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் இரண்டு தங்கப் பதக்கங்களும், அவர் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் புதிய சாதனை படைத்தார். அதேசமயம் அவினாஷ் சேபிள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் தங்கப் பதக்கம் வென்றனர். கலப்பு ரிலே மற்றும் பெண்களுக்கான 4×400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் பூஜா சிங் தங்கப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் அனிமேஷ் குஜூர் புதிய தேசிய சாதனையைப் படைத்து வெண்கலப் பதக்கமும், பெண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் பருல் சவுத்ரி தேசிய சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். மேலும், சச்சின் யாதவ் (ஈட்டி எறிதல்), பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்) மற்றும் தேஜஸ்வின் சங்கர் (டெக்கத்லான்) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
பதக்க பட்டியலில் இந்தியா 2வது இடம்:
2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் சீனா மொத்தம் 32 பதக்கங்களில் 19 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. இந்தியா 8 தங்கப் பதக்கங்களுடன் ஜப்பானை பின்னுக்குத் தள்ளியது. ஜப்பான் மொத்தமாக 28 பதக்கங்களை வென்றிருந்தாலும், 5 தங்க பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது.