AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: பிளே ஆஃப் செல்ல ஒரே ஒரு வாய்ப்பு.. பயன்படுத்துமா சென்னை சூப்பர் கிங்ஸ்..?

CSK Play-off Scenario: சிஎஸ்கே மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அது 16 புள்ளிகளைப் பெறும். ஆனாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்னும் அச்சுறுத்தலாக உள்ளன. ராஜஸ்தான் 11 போட்டிகளில் இருந்து 12 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளன.

IPL 2026: பிளே ஆஃப் செல்ல ஒரே ஒரு வாய்ப்பு.. பயன்படுத்துமா சென்னை சூப்பர் கிங்ஸ்..?
சென்னை சூப்பர் கிங்ஸ்Image Source: CSK/X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 May 2026 16:20 PM IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) தொடக்கத்தில் தொடர்ச்சியாக 3 தோல்விகளைச் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அடுத்தடுத்து சில போட்டிகளில் வெற்றிபெற்று பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டது. இருப்பினும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வலுவான மீள்வருகையை நிகழ்த்தி, போட்டியில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டது. ஆனால் இப்போது, ​​ஒரு தோல்வி ஒரு பெரும் அடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஐபிஎல் 2026 சீசனில் சென்னை அணியை ஏற்கனவே தோற்கடித்த 2 அணிகளையும் அடுத்து எதிர்கொள்ளவிருப்பதால், இந்த அடியானது பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் அணியின் பாதையை கிட்டத்தட்ட மூடிவிட்டது.

நேற்று அதாவது 2026 மே 15ம் தேதி, பிளேஆஃப் சுற்றிலிருந்து ஏற்கெனவே வெளியேறிய அணியான லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 12வது போட்டியில் விளையாடியது . இருப்பினும், லக்னோ அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சென்னையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டிக்கு முன்பு, 11 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தத் தோல்வியால் நிகர ரன் ரேட்டில் பாதிப்பை சந்தித்து தற்போது 5வது இடத்திற்குச் சரிந்துள்ளது.

ALSO READ: வேறு அணிக்கு செல்கிறாரா ஹர்திக்..? ஷர்துல் தாக்கூர் கொடுத்த விளக்கம்!

சிஎஸ்கே அணிக்கு பிளேஆஃப் சுற்று ஏன் கடினமாக அமைந்தது?

சிஎஸ்கே இந்தப் போட்டியில் வென்றிருந்தால், 14 புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பிடித்திருக்கலாம். இது பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதை சிஎஸ்கே அணிக்கு எளிதாக்கியிருக்கும். இருப்பினும், இந்தத் தோல்வி சென்னை அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், சென்னை அணிக்கு இப்போது இன்னும் 2 போட்டிகளே மீதமுள்ளன. சென்னையின் அடுத்த போட்டி வருகின்ற 2026 மே 18ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிராகவும், நடப்பு சீசனில் தங்களது இறுதிப் போட்டியை வருகின்ற 2026 மே 21ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு எதிராகவும் நடைபெறுகிறது. சிஎஸ்கே இந்த இரண்டு போட்டிகளிலும் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால், அவர்களுக்கு பிளேஆஃப் சுற்றுக்கான இடம் உறுதியாகக் கிடைக்குமா என்று சொல்வது கடினம்.

இந்த சீசனில் இதற்கு முன்பு இந்த 2 அணிகளுடனும் சென்னை விளையாடியுள்ளது. இதில், சென்னை அணியை ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்திலும், குஜராத் சென்னையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இரு அணிகளும் தற்போது சிறப்பான ஃபார்மில் இருப்பதுடன், முதல் 3 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன. எனவே, சென்னைக்கான சவால் எளிதானது அல்ல. இருப்பினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஓரளவு சாதகமாக அமையலாம். ஏனெனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது சொந்த ஸ்டேடியமான சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் விளையாடுகிறது. அதேநேரத்தில், சென்னை குஜராத் அணியை அகமதாபாத்தில் எதிர்கொள்ளவுள்ளனர், அந்த மைதானத்தில் குஜராத்தை வீழ்த்துவது மிகவும் கடினமானதாக இருக்கும்.

ALSO READ: கொல்கத்தாவில் கொட்டப்போகும் மழை.. வெளியேறும் அபாயத்தில் KKR? பலன் பெறும் GT!

சிஎஸ்கே முதல் 4 இடங்களுக்குள் நுழைவது எப்படி?

சிஎஸ்கே மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அது 16 புள்ளிகளைப் பெறும். ஆனாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்னும் அச்சுறுத்தலாக உள்ளன. ராஜஸ்தான் 11 போட்டிகளில் இருந்து 12 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளன. ராஜஸ்தான் தனது 3 போட்டிகளிலும் தோற்காவிட்டாலும், குறைந்தபட்சம் இரண்டிலாவது தோற்க வேண்டும் என சென்னை ரசிகர்கள் விரும்புவார்கள். இதேபோல், பஞ்சாப் கிங்ஸ் 12 போட்டிகளில் இருந்து 13 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பஞ்சாப் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன. அதன்படி, ஒன்று ஆர்சிபி அணிக்கு எதிராகவும், மற்றொன்று எல்எஸ்ஜி அணிக்கு எதிராகவும் உள்ளது. இதில், பஞ்சாப் ஒரு போட்டியில் தோற்றால்கூட, சிஎஸ்கே 16 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.

Follow Us