IND vs ENG 2nd T20: இந்திய அணியின் தோல்விக்கு காரணம் யார்..? ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்!
Shreyas Iyer Statement: அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர்களான ஃபில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரையும் டக் அவுட் ஆக்கி, சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்.இருப்பினும், ஹாரி புரூக் (39), ஜேக்கப் பெத்தேல் (76) மற்றும் டாம் பேன்டன் (39) ஆகியோரின் அதிரடி ஆட்டம், இந்தியாவிடமிருந்து போட்டியைப் பறித்தது.
இந்திய அணி (Indian Cricket Team) நிர்ணயித்த 191 ரன்களைத் துரத்திய இங்கிலாந்து (IND vs ENG), அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர்களான ஃபில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரையும் டக் அவுட் ஆக்கி, சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்.இருப்பினும், ஹாரி புரூக் (39), ஜேக்கப் பெத்தேல் (76) மற்றும் டாம் பேன்டன் (39) ஆகியோரின் அதிரடி ஆட்டம், இந்தியாவிடமிருந்து போட்டியைப் பறித்தது. ஆனாலும், 16 ஓவர்களுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு 49 ரன்கள் தேவைப்பட்டன, மேலும் வெற்றிக்குத் தேவையான ரன் விகிதம் சுமார் 12 ஆக இருந்தது. 17வது ஓவரில் ரவி பிஷ்னோய் 29 ரன்களை விட்டுக்கொடுத்து, இங்கிலாந்துக்கான வெற்றியை உறுதி செய்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் இதை ஒரு திருப்புமுனை என்று குறிப்பிட்டார்.
ALSO READ: இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட்.. இந்திய அணியின் தோல்விக்கு இந்த 5 தவறுகளே காரணம்!
ஷ்ரேயாஸ் ஐயர் என்ன கூறினார்?
போட்டிக்குப் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், “நாங்கள் எங்கே பின்தங்கினோம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், நான் எந்த ஒரு வீரரின் பெயரையும் குறிப்பிட மாட்டேன். 15 ஓவர்களுக்குப் பிறகு ஆட்டத்தின் வேகம் குறைந்துவிட்டது. அந்த நோ-பால் வீச்சிலிருந்து அவர்கள் சிறப்பாக மீண்டு வருவார்கள் என்று நான் நினைக்கிறேன். பின்னர் 17வது ஓவரில் ஆட்டம் கைநழுவிப் போனது, அதிலிருந்து பந்துவீச்சாளர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், இந்த ஆடுகளத்தில் இந்த ஸ்கோர் (190) ஒரு நல்ல ஸ்கோர் ஆகும்” என்றார்.




ஷ்ரேயாஸ் ஐயர் மேலும் கூறுகையில், “ஜேக்கப் பெத்தேல் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட விதத்திற்காகப் பாராட்டப்பட வேண்டும். சாம் கரண் ஆரம்பத்திலேயே ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு, எங்கள் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு விளையாட எந்த இடமும் கொடுக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். வைபவ் சூர்யவன்ஷியிடம் அந்த அச்சமற்ற பாணி இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர் விளையாடுவதைப் பார்ப்பது அருமையாக இருந்தது. அவர் பதட்டமாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த சில மாதங்களாக வைபவ் சூர்யவன்ஷி அற்புதமாகச் செயல்பட்டு வருகிறார். வைபவ் சூர்யவன்ஷி அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை உயர்த்திக்கொண்டார், அதைப் பார்ப்பது அருமையாக இருந்தது.” என்றார்.
ALSO READ: தோல்வியை தவிர்க்குமா இந்தியா..? இங்கிலாந்து எதிரான 3வது டி20 போட்டி எப்போது?
கேப்டன் பெயரில் மோசமான சாதனை
3க்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய 12 கேப்டன்களில், தனது முதல் 4 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாத ஒரே கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆவார். அவரது கேப்டன்சியின் கீழ், இந்தியா அயர்லாந்தில் 2 போட்டிகளில் தோற்றது, இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டி கைவிடப்பட்டது. அதேநேரத்தில், இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்தது.