AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs AFG 3rd ODI: மீண்டும் ஆப்கானிஸ்தானை வெற்றி கண்ட இந்தியா.. சாதித்த சுப்மன் படை..!

IND vs AFG ODI Series: 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது. இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இது சுப்மன் கில் தலைமையிலான அணியின் முதல் தொடர் வெற்றியாகும். இது இந்தத் தொடரை பல வழிகளில் சிறப்பானதாக ஆக்குகிறது. 3வது ஒருநாள் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

IND vs AFG 3rd ODI: மீண்டும் ஆப்கானிஸ்தானை வெற்றி கண்ட இந்தியா.. சாதித்த சுப்மன் படை..!
இந்திய கிரிக்கெட் அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 20 Jun 2026 20:23 PM IST

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சதம் மற்றும் ரோஹித் ஷர்மாவின் (Rohit Sharma) அரைசதம் ஆகியவற்றின் உதவியால் இந்திய அணி (Indian Cricket Team) வெற்றி கண்டது. சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவர்களில் 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி சதம் அடித்தார். இதற்குப் பதிலளித்த இந்திய அணி, 21.2 ஓவர்கள் முன்னதாகவே போட்டியை வென்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது. இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

ALSO READ: ஒரே ஆள்.. ஒரே மாதிரி கேட்ச்.. 3 விக்கெட் போச்சு.. ரோஹித் – பிரசித் செய்த சிறப்பு சாதனை!

219 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்தியாவுக்காக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 86 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் 14 பவுண்டரிகளையும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இதற்கிடையில், ரோஹித் ஷர்மா 69 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உதவியுடன் 79 ரன்கள் குவித்தார். ரோஹித் சர்மா ஆட்டமிழந்த பிறகு, துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 19 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உதவியுடன் ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் எடுத்தார். முன்னதாக, பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் அபாரமாகச் செயல்பட்டு, வெறும் 23 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சுப்மன் கில் தலைமையில் முதல் தொடர் வெற்றி:


3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது. இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இது சுப்மன் கில் தலைமையிலான அணியின் முதல் தொடர் வெற்றியாகும். இது இந்தத் தொடரை பல வழிகளில் சிறப்பானதாக ஆக்குகிறது. 3வது ஒருநாள் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது முதல் ஐந்து விக்கெட் சாதனையாகும்.

இந்தப் போட்டியில், ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். பிரசித் கிருஷ்ணாவின் அபாயகரமான பந்துவீச்சு ஆப்கானிஸ்தானின் டாப் ஆர்டரை முற்றிலுமாகச் சிதைத்தது. பிரசித் கிருஷ்ணா இந்திய அணியின் பவர்பிளேயில் முதல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஹ்மானுல்லா குர்பாஸ் (5), இப்ராஹிம் ஜத்ரான் (11), ரஹ்மத் ஷா (5) மற்றும் அப்துல் ரசூலி (1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர், அதன் பிறகு ஷாஹிதி ஒரு மறக்க முடியாத இன்னிங்ஸை விளையாடினார்.

ALSO READ: அறிமுக ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்டுகள்.. ரெக்கார்ட் வைத்த குர்னூர் பிரார்!

36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த பிறகு, கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதியும் அஸ்மத்துல்லா உமர்சாயும் இணைந்து 105 ரன்களுக்கு ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஷாஹிதி 131 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஒரு சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகளை அடித்து ஒரு சிறப்பான இன்னிங்ஸை ஆடினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது முதல் சதமாகும். ஷாஹிதியின் விக்கெட்டுடன், பிரசித் கிருஷ்ணா தனது ஐந்தாவது விக்கெட் சாதனையை நிறைவு செய்தார்.

Follow Us