AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: ஓய்வு முடிவை திரும்ப பெறும் ரோஹித், கோலி..? சமூக வலைதளங்களில் பரவும் தகவல்!

Rohit Sharma - Virat Kohli: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது டெஸ்ட் ஓய்வை ரத்து செய்துவிட்டதாகவும், இந்த முடிவு பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் 'X' என்ற சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டது. இது தவிர, கோலியே தனது மறுபிரவேசத்தை அறிவித்துவிட்டதாகவும் சில பதிவுகள் கூறின.

Team India: ஓய்வு முடிவை திரும்ப பெறும் ரோஹித், கோலி..? சமூக வலைதளங்களில் பரவும் தகவல்!
ரோஹித் சர்மா - விராட் கோலி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Apr 2026 14:35 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) ஜாம்பவான் பேட்ஸ்மேன் விராட் கோலி, மே 12, 2025 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். அதே நேரத்தில், ரோஹித் சர்மா மே 7, 2025 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். இந்த 2 நட்சத்திர வீரர்களின் திடீர் முடிவு ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, ​இந்த 2 ஜாம்பவான்களும் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளிலும், ஐபிஎல் சீசன்களிலும் தங்களது அணிக்காக விளையாடி வருகின்றனர். ஐபிஎல் 2026 சீசனின் முதல் போட்டியில், விராட் கோலி 69* ரன்கள் குவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (Royal Challengers Bengaluru) வெற்றிக்கு அழைத்து சென்றார். அதே நேரத்தில், ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 78 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிக்கு வழிநடத்தினார்.

இதற்கிடையில், ஐபிஎல் தொடரின் போது, ​​கோலியும் ரோஹித்தும் தங்களது டெஸ்ட் ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டதாகப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. அவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்ப முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

ALSO READ: ஐபிஎல் முடிந்த கையோடு அடுத்த 30 நாட்களில் 10 டி20 போட்டி.. வெளியான இந்திய அணியின் அட்டவணை!

கோலியும் ரோஹித்தும் ஓய்வு பெறும் முடிவை மாற்றுவார்களா?


விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது டெஸ்ட் ஓய்வை ரத்து செய்துவிட்டதாகவும், இந்த முடிவு பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ‘X’ என்ற சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டது. இது தவிர, கோலியே தனது மறுபிரவேசத்தை அறிவித்துவிட்டதாகவும் சில பதிவுகள் கூறின. இருப்பினும், இந்தக் கூற்றுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ (பிசிசிஐ) அல்லது இந்த இரண்டு வீரர்களோ இது போன்ற எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

ALSO READ: அயர்லாந்து டி20 தொடரில் அறிமுகமா? வைபவ் சூர்யவன்ஷிக்கு விரைவில் இந்திய அணியில் வாய்ப்பு!

ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் ரோஹித், கோலி:

டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, முன்னாள் இந்திய அணியின் கேப்டன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தற்போது இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இருவரும் தங்களது கடைசி ஒருநாள் போட்டியை 2026 ஜனவரி 18 அன்று இந்தூரில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினர். இந்த இரண்டு அனுபவ வீரர்களும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக ஒரு சில ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கின்றனர்.

Follow Us