AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

NZ vs SA: மகளிர் ஒருநாள் போட்டி வரலாற்றிலேயே அதிகபட்ச சேஸிங்.. வரலாறு படைத்த நியூசிலாந்து மகளிர் அணி!

NZ chase highest total in WODI: நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் மொத்தம் 696 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான மகளிர் ஒருநாள் போட்டியில் இதுவே அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

NZ vs SA: மகளிர் ஒருநாள் போட்டி வரலாற்றிலேயே அதிகபட்ச சேஸிங்.. வரலாறு படைத்த நியூசிலாந்து மகளிர் அணி!
நியூசிலாந்து கேப்டன் அமெலியா கெர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Apr 2026 17:39 PM IST

தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், வரலாற்றையும் படைத்துள்ளது. மகளிர் ஒருநாள் போட்டிகளின் வரலாற்றிலேயே அதிகபட்ச இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 347 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து துரத்திப் பிடித்தது ஒரு புதிய சாதனையாகும். இதற்கு முன்பு, மகளிர் கிரிக்கெட் (Womens Cricket) வரலாற்றில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு 339 ரன்களாக இருந்தது. நியூசிலாந்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு அதன் 24 வயது கேப்டன் அமெலியா கெர் முக்கியப் பங்காற்றினார். அமெலியா கெரின் தனித்துவ சாதனை இன்னும் பல காலம் கிரிக்கெட்டில் பேசப்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை..

ALSO READ: 5 டி20 போட்டிகள்..! தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான வலுவான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

மொத்தமாக 696 ரன்கள் குவிப்பு:

நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் மொத்தம் 696 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான மகளிர் ஒருநாள் போட்டியில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும். முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்து, இதுவரை நியூசிலாந்து அணியால் எட்டப்படாத ஒரு இலக்கை நிர்ணயித்தது.

இருப்பினும், அமெலியா கெர் கேப்டனாகப் பொறுப்பேற்றதிலிருந்து நியூசிலாந்து மகளிர் அணியின் மனப்பான்மையில் ஏற்பட்ட மாற்றம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தெளிவாகத் தெரிந்தது. மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்ட நியூசிலாந்து கேப்டன் அமெலியா கெர், பேட்டிங் செய்ய வந்தவுடனேயே பொறுப்பேற்று அதனைச் சிறப்பாக எடுத்து சென்று போட்டியை முடித்து கொடுத்தார்.

347 ரன்கள் இலக்கு:


347 ரன்கள் என்ற சாதனை இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணி 21 ரன்கள் எடுத்திருந்தபோது, தனது முதல் விக்கெட்டை இழந்தது. இருப்பினும், பேட்டிங் செய்ய வந்த கேப்டன் அமெலியா கெர், ஒரு முனையில் நிலைத்து நின்று தனது ஆட்டத்தைத் தொடர்ந்தார். இதன் விளைவாக, விக்கெட்டுகள் வீழ்ந்தபோதும், அது பெரிதாகத் தெரியவில்லை, ஏனெனில் ஸ்கோர்போர்ட் உயர அமெலியா கெர் தன்னால் முடிந்ததை செய்தார்.

வரலாறு படைத்த நியூசிலாந்து:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், அமெலியா கெர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, தனது அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்தார். இதுமட்டுமின்றி, 139 பந்துகளை எதிர்கொண்டு 23 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 179 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது கெர்ரின் ஆறாவது ஒருநாள் சதமாகும். கெர் ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய இன்னிங்ஸாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிச்சயமாக மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்றாகும். இதன் விளைவாக, ஒருநாள் போட்டி வரலாற்றிலேயே மிகப்பெரிய இலக்கை தென்னாப்பிரிக்க மகளிர் அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. அமெலியா கெர் சதத்தால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக, நியூசிலாந்து அணி தொடரை 1-1 சமன் செய்துள்ளது.

ALSO READ: இந்திய அணியில் மறுக்கப்படும் வாய்ப்பு.. தேர்வாளர்களை மறைமுகமாக சாடிய முகமது ஷமி!

ஆட்ட நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெலியா கெர்:

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது போட்டியில் 179 ரன்களை குவித்த அமெலியா கெர் ஆட்ட நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Follow Us