Ind Vs Eng: முதல் போட்டியிலேயே டக் டவுட்டான சாய் சுதர்சன்… 15 வருடங்களில் முதல் இந்தியர் – மோசமான சாதனை
Sai Sudharsan’s Tough Start: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த நிலையில் ஜூன் 20 , 2025 அன்று நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன் ரன்கள் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் போட்டியேலேயே டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்தார்.

2025 – 2027 ஆம் ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship) போட்டிகளின் ஒரு பகுதியாக இந்தியா-இங்கிலாந்து (England) அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவிருக்கின்றன. முதல் போட்டி ஜூன் 20, 2025 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி இளம் வீரர்கள் கொண்ட படையாக களமிறங்கியிருக்கிறது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் (Sai Sudharsan) தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். மேலும் சாய் சுதர்சன் தனது டெஸ்ட் கேரியரை தொடங்கினார் குறிப்பிடத்தக்கது. அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்கினார் சாய் சுதர்சன். ரன்கள் எதுவும் எடுக்காமலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார்.
மோசமான சாதனை படைத்த சாய் சுதர்சன்
சாய் சுதர்சன் தனது முதல் டெஸ்ட்டில் சற்று பதற்றம் நிறைந்த சூழலில் களம் இறங்கினார். ஆனால் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பென் ஸ்டோக் வீசிய பந்தை இடது பக்கமா ஸ்வீப் செய்ய முயற்சித்தார். ஆனால் சரியாக டைமிங் கிடைக்காமல், பந்து பின்னாள் சென்றது. இந்த நிலையில் விக்கெட் கீப்பர் ஜேமித் ஸ்மித் டைவிங் கேட்ச் பிடித்து சாய் சுதர்சனை அவுட்டாக்கினார். இதன் மூலம், அவர் 15 ஆண்டுகளுக்கு பிறகு, அறிமுக டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டான முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனை படைத்தார்.




சாய் சுதர்சன் அவுட்டான வீடியோவைப் பகிர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி
Right before lunch, Ben Stokes delivers! 👊
Sai Sudharsan goes for a duck on debut 🦆
🇮🇳 9️⃣2️⃣-2️⃣ pic.twitter.com/jfalyUvApv
— England Cricket (@englandcricket) June 20, 2025
இந்திய வீரர்களின் டக் அவுட் வரலாறு
சாய் சுதர்சன் கடந்த 2010 ஆம் ஆண்டில் விருத்திமன் சாஹா டக் அவுட் ஆகியிருந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு சாய் சுதர்சன் இந்த சாதனையை படைத்திருக்கிறார். இதுவரை 10 வீரர்கள் அறிமுக போட்டியில் டக் அவுட் ஆகியிருக்கின்றனர். கடந்த 1958 ஆம் ஆண்டு மனோகர் ஹர்டிகார், 1969 ஆம் ஆண்டு குண்டப்பா விஸ்வநாத், அதே ஆண்டு ஏக்நாத் சொல்கர், கடந்த 1981 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், 1999 ஆம் ஆண்டு தேவாங்க் காந்தி, அதே ஆண்டு விஜய் பரத்வாஜ், கடந்த 2002 ஆம் ஆண்டு அஜய் ரத்ரா, அதே ஆண்டில் பார்த்திவ் படேல், 2010 ஆம் ஆண்டு விருத்திமான் சஹா ஆகியோர் டக் அவுட்டானார்கள். இந்த வரிசையில் சாய் சுதர்சன் இடம் பிடித்திருக்கிறார்.
டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் சாய் சுதர்சனுக்கு பிசிசிஐ வாழ்த்து
Test Cap number 3⃣1⃣7⃣
Congratulations to Sai Sudharsan, who is all set to make his Test Debut 🙌
Updates ▶️ https://t.co/CuzAEnBkyu#TeamIndia | #ENGvIND pic.twitter.com/wn8kaXdln6
— BCCI (@BCCI) June 20, 2025
இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்தியாவுக்கு ஒரு வலுவான தொடக்கத்தை தந்தனர். ஆனால் அது நீண்ட நேரம் நீட்டிக்கவில்லை. உணவு இடைவேளைக்கு முன்னதாகவே கே.எல்.ராகுலும், அதன் பிறகு சாய் சுதர்ஷனும் அவுட்டாக இந்திய அணி 92/2 என்ற நிலையில் இருந்தது. இந்தப் போட்டிகள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்ற பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் முதல் டெஸ்ட் போடராகும். இந்தப் போட்டியில் கேப்டனாக சுப்மன் கில்லும் துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் களமிறங்கியிருக்கின்றனர். அவர்கள் இருவரும் முறையே 4, 5 என்ற வரிசையில் களமிறங்குவர். அவர்களைத் தொடர்ந்து கருண் நாயர், ஜடேஜா என பேட்டிங் வரிசை வலுவாக இருக்கிறது.