IND vs AFG: காத்திருக்கும் 37 ஆண்டுகால சாதனை.. முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா..!
Rohit Sharma: ரோஹித் சர்மா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடத் தயாராக உள்ளார். நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இந்த இரு வீரர்களையும் வருகின்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது ஒருநாள் போட்டிகளில் காணலாம்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வருகின்ற 2026 ஜூன் 13ம் தேதி முதல் தொடங்குகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா களமிறங்கும்போதே மிகப்பெரிய வரலாறு படைக்க இருக்கிறார். அதன்படி, ஒருநாள் வடிவத்தில் இந்தியாவுக்காக (Indian Cricket Team) விளையாடும் மிக வயதான வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைப்பதுடன், 37 ஆண்டுகள் என்ற சாதனையையும் முறியடிப்பார். ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா (Rohit Sharma) சமீபத்தில் பிசிசிஐயின் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அணியில் இணைந்துள்ளார்.
ALSO READ: முழு உடற்தகுதியுடன் ரோஹித் சர்மா.. ஆப்கானிஸ்தான் தொடரில் கெத்தாக களம்!
இதன்மூலம், ரோஹித் சர்மா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடத் தயாராக உள்ளார். நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இந்த இரு வீரர்களையும் வருகின்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது ஒருநாள் போட்டிகளில் காணலாம்.
ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை என்ன..?
2026 ஜூன் 13ம் தேதி தர்மசாலா மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோஹித் சர்மா களமிறங்கும்போது, அவருக்கு 39 வயது மற்றும் 44 நாட்கள் ஆகியிருக்கும். ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடும் மிக வயதான வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைப்பார். முன்னதாக, கடந்த 1983ம் ஆண்டு இந்தச் சாதனையை சாம்பியன் மொகிந்தர் அமர்நாத் படைத்திருந்தார். மொகிந்தர் அமர்நாத் 1989-ல் இந்தியாவுக்காக தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடினார். அப்போது மொகிந்தர் அமர்நாத்துக்கு 39 வயது மற்றும் 36 நாட்கள் ஆகியிருந்தது. தற்போது, 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மா தயாராக இருக்கிறார்.
முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, 2027ம் ஆண்டு நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளார். ரோஹித் ஏற்கனவே டி20 போட்டிகளுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது, 2027 உலகக் கோப்பைக்கு இந்தியாவிற்காக சிறப்பாக வழிநடத்தி, இந்த வடிவத்திலிருந்து ஓய்வு பெறுவதே அவரது இலக்காக உள்ளது. ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்படவில்லை என்றாலும், ஒருநாள் வடிவத்தில் தற்போது வரை சிறப்பாக விளையாடி வருகிறார். வருகின்ற 2027ம் ஆண்டு உலகக் கோப்பை வரை தனது உடற்தகுதியையும் உடல் தகுதியையும் பேணிக்கொள்ள ரோஹித் சர்மா கடுமையாக உழைத்து வருகிறார்.