AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: ஃபீல்டிங் செய்ய வந்த சர்பராஸ் கான்.. ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட் வீழ்த்திய அதிசயம்!

Sarfaraz Khan Sledging: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கானுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் , அவரது பீல்டிங் மற்றும் ஸ்லெட்ஜிங்கும் இந்திய அணிக்கு நிச்சயமாக உதவியது. கொழும்பு டெஸ்டின் 3வது நாளில் இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 25ம் தேதி இலங்கை கேப்டன் தனஞ்சய் டி சில்வாவை ஆட்டமிழக்கச் செய்வதில் சர்பராஸ் கான் முக்கியப் பங்கு வகித்தார்.

IND vs SL: ஃபீல்டிங் செய்ய வந்த சர்பராஸ் கான்.. ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட் வீழ்த்திய அதிசயம்!
சர்பராஸ் கான்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Aug 2026 16:38 PM IST

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே (IND vs SL) டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி (Indian Cricket Team) மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதிலும், இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்று தெரிகிறது. தற்போது இந்தப் போட்டியில் சப் வீரராக உள்ளே வந்த சர்பராஸ் கான் செய்த அற்புதம் இந்திய அணிக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. இதனால், இலங்கை கேப்டனின் விக்கெட்டும் வீழ்ந்தது.

ALSO READ:  ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’.. கைகளை மடக்கி துருவ் ஜூரல் சிறப்பு கொண்டாட்டம்!

சர்பராஸ் கான் செய்த சம்பவம்:


இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கானுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் , அவரது பீல்டிங் மற்றும் ஸ்லெட்ஜிங்கும் இந்திய அணிக்கு நிச்சயமாக உதவியது. கொழும்பு டெஸ்டின் 3வது நாளில் இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 25ம் தேதி இலங்கை கேப்டன் தனஞ்சய் டி சில்வாவை ஆட்டமிழக்கச் செய்வதில் சர்பராஸ் கான் முக்கியப் பங்கு வகித்தார். ஷார்ட் லெக் பகுதியில் நின்றுகொண்டிருந்த சர்பராஸ், இலங்கை கேப்டனிடம் ஏதோ சொன்னதால், அடுத்த 2 பந்துகளிலேயே இலங்கை கேப்டன் தனஞ்சய் டி சில்வா ஆட்டமிழந்தார்.

35வது ஓவரில், சர்பராஸ் கான் ஷார்ட் லெக் பகுதியில் நின்று கொண்டிருந்தார். இலங்கை கேப்டன் தனஞ்சய் டி சில்வா பேட்டிங் செய்து கொண்டிருந்தார், மானவ் சுதார் பந்து வீசிக் கொண்டிருந்தார். 35வது ஓவரின் மூன்றாவது பந்தில், சர்பராஸ், தனஞ்சய் டி சில்வாவிடம், “நீங்கள் கேப்டன், நேரத்தை வீணடிக்கிறீர்கள், பதற வேண்டாம்” என்று கூறினார். இதைக் கேட்ட தனஞ்சய் கவனம் சிதற, அடுத்த இரண்டு பந்துகளுக்குப் பிறகு ஸ்லிப்ஸில் கேட்ச் ஆனார். இந்த விக்கெட்டுக்குப் பிறகு சர்பராஸ் ஆரவாரமாகக் கொண்டாடினார். சர்பராஸ் ஷார்ட் லெக் பகுதியில் நின்று கொண்டு இலங்கை பேட்ஸ்மேன்களிடம் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்து கொண்டிருந்ததால், நடுவர்கள் அவரைத் தடுத்து நிறுத்த வேண்டியிருந்தது.

ALSO READ: கிரிக்கெட் வீரரை கைது செய்த போலீஸ்.. இரவு விடுதியில் பரபர.. பிரைடன் கார்ஸ் நிலைமை என்ன?

வீரர்களிடையே வாக்குவாதம்:

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர், வெறும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுப் போர் மட்டுமல்ல. இரு அணி வீரர்களும் வார்த்தைப் போரிலும் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக காலி டெஸ்டில், இலங்கை விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவுக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதே பாணியில் யஷஸ்வி, டிக்வெல்லாவை ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர், கொழும்பு டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவுடன் ஜெய்ஸ்வாலுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அவர்கள் தலைகளும் மோதிக்கொண்டன. இதன் காரணமாக இருவரின் போட்டி ஊதியத்தில் 25% பிடித்தம் செய்யப்பட்டது. தற்போது, ​​சர்பராஸ் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்வதை காண முடிந்தது.

Follow Us