IND vs SL: 500 ரன்களை கடந்து ரன் மழை.. இலங்கைக்கு எதிராக இந்திய அணி சம்பவம்!
SL vs IND 2nd Test Day 2 Stumps: 2026 ஆகஸ்ட் 24ம் தேதியான இன்று இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸை 503/9 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், மழை காரணமாக ஆட்டம் பலமுறை தடைபட்டது. தேவ்தத் படிக்கலின் (117) சதத்தின் உதவியால், இந்தியா முதல் நாளில் 300 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாளில், துருவ் ஜூரல் 177 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 9 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் 115 ரன்கள் எடுத்தார்.
கொழும்பில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில், போட்டியை நடத்தும் இலங்கை அணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்திய அணி (Indian Cricket Team) போட்டியில் தனது பிடியை வலுப்படுத்தியுள்ளது. இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை 503 ரன்களில் டிக்ளேர் செய்தது. இந்தியாவுக்காக துருவ் ஜூரல் சதம் அடித்து, 115 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தேவ்தத் படிக்கல் 117 ரன்களும், ரிஷப் பண்ட் (Rishab Pant) 63 ரன்களும் எடுத்தனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், போட்டியை நடத்தும் இலங்கை அணி வெறும் 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. லஹிரு உடாரா 1 ரன்னுக்கும், பிரபாத் ஜெயசூரியா 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கமில் மிஷாரா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ALSO READ: முன்னாள் கேப்டன் தோனியின் அதிக ரன்கள்.. குறைந்த போட்டியில் துரத்தி பிடித்த ரிஷப் பண்ட்!




இந்திய அணி டிக்ளேர்:
Stumps, Day 2: A thoroughly dominant day comes to an end as #TeamIndia take two quick wickets to reduce Sri Lanka to 8-2 after declaring at 503-9. Earlier, Dhruv Jurel registered his 2nd Test ton.
Details – https://t.co/r9FgXSdsMf #TeamIndia | #SLvIND pic.twitter.com/hTKl01SJ3X
— BCCI (@BCCI) August 24, 2026
2026 ஆகஸ்ட் 24ம் தேதியான இன்று இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸை 503/9 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், மழை காரணமாக ஆட்டம் பலமுறை தடைபட்டது. தேவ்தத் படிக்கலின் (117) சதத்தின் உதவியால், இந்தியா முதல் நாளில் 300 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாளில், துருவ் ஜூரல் 177 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 9 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் 115 ரன்கள் எடுத்தார். 2026 ஆகஸ்ட் 23ம் தேதியான நேற்று காயமடைந்த ரிஷப் பண்ட், 89 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்தார். இலங்கை சார்பில், அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூரியா மற்றும் கேசரா நுவந்தா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். லஹிரு குமாரவும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
ALSO READ: சண்டையிட்ட விவகாரம்.. ஜெய்ஸ்வால் – அசிதாவுக்கு அபராதம் விதித்த ஐசிசி!
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 3 ஓவர்களை எதிர்கொண்டு, 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் எட்டு ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பிரசித் கிருஷ்ணா லஹிரு உடாராவை (1) ஆட்டமிழக்கச் செய்தார், அதனைத் தொடர்ந்து மானவ் சுதார் பிரபாத் ஜெயசூரியாவை (2) ஆட்டமிழக்கச் செய்தார். தற்போது, இலங்கை இந்தியாவை விட 495 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்தியா இந்தப் போட்டியில் வலுவான பிடியைக் கொண்டுள்ளது என்று உறுதியாகக் கூறலாம். இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை 165 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதால், இந்தத் தொடரின் இறுதிப் போட்டி தற்போது வரை இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது.