Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs ENG Test: அறிமுக போட்டியிலேயே கேப்டன், துணை கேப்டன் சதம்.. வரலாற்றில் இதுவே முதல் முறை..!

IND vs ENG 1st Test: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய கேப்டன் சுப்மன் கில் (147) மற்றும் துணை கேப்டன் ரிஷப் பண்ட் (134) சதம் அடித்து அசத்தினர். இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவரும் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த முதல் சம்பவம். கில் விராட் கோலியின் சாதனையையும், பண்ட் எம்.எஸ். தோனியின் சாதனையையும் முறியடித்தனர். இந்தியா 471 ரன்கள் குவித்தது.

IND vs ENG Test: அறிமுக போட்டியிலேயே கேப்டன், துணை கேப்டன் சதம்.. வரலாற்றில் இதுவே முதல் முறை..!
சுப்மன் கில் - ரிஷப் பண்ட் Image Source: AP
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 21 Jun 2025 22:36 PM

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் (IND vs ENG 1st Test) இந்திய கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடி சதங்களை அடித்துள்ளனர். இந்த சதத்தின் மூலம், 148 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையை ரிஷப் பண்ட்- சுப்மன் கில் (Rishabh Pant) ஜோடி படைத்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) 227 பந்துகளில் 147 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் கில் 19 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். இது கில்லின் டெஸ்ட் வாழ்க்கையில் 6வது சதமாகும். ஒரு கேப்டனாக இது அவரது முதல் சதமாகும். இதைதொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆட்டமிழந்தது.

விராட் கோலியின் சாதனை முறியடிப்பு:

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சதத்தின் மூலம் சுப்மன் கில், முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவியில் அறிமுகமானபோது சதம் அடித்த இளைய இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார்.  சுப்மன் கில் தனது 25 வயது 285 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதையே, விராட் கோலி 26 வயது 34 நாட்களில் இந்த சாதனையை படைத்தார். அதே நேரத்தில், துணை கேப்டன் ரிஷப் பண்ட் 178 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில், பண்ட் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை அடித்தார். இது ரிஷப் பண்ட் டெஸ்ட் வாழ்க்கையில் 7வது சதமாகும். இந்த சதத்தின் மூலம், ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்தார்.

இதுவே முதல் முறை:


இந்த சதத்தின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பண்ட் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனை தோனியின் பெயரில் இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி 6 சதங்கள் அடித்திருந்தார். ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் தங்கள் சதங்களுடன் புதிய சாதனையைப் படைத்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவரும் தங்கள் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவியின் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்தது இதுவே முதல் முறை.