AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: தலைமை தேர்வாளராக தொடர்வாரா அகர்கர்..? பிசிசிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

Ajit Agarkar Tenure Extension: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு, இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்கப்படும். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு பிசிசிஐ அதிகாரிகள் அஜித் அகர்கரை சந்திக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Team India: தலைமை தேர்வாளராக தொடர்வாரா அகர்கர்..? பிசிசிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு!
அஜித் அகர்கர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Aug 2026 22:27 PM IST

தற்போது, ​​இந்திய அணி (Indian Cricket Team) இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. உலக டெஸ்ட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது. மேலும், இந்தத் தொடர் இந்திய அணியின் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தலைமைத் தேர்வாளருக்கும் மிக மிக முக்கியமானது. இந்தியா-இலங்கை டெஸ்ட் (IND vs SL) தொடருக்குப் பிறகு, பிசிசிஐ ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தி, தலைமைத் தேர்வாளர் குறித்து ஒரு பெரிய முடிவை எடுக்கும். இந்தநிலையில், பிசிசிஐ சிறப்பு கூட்டம் எதற்கானது, யாருக்கு இது முக்கியமானது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: காத்திருந்த கங்குலி சாதனை.. சதம் அடித்து சமன் செய்த தேவ்தத் படிக்கல்..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு, இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்கப்படும். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு பிசிசிஐ அதிகாரிகள் அஜித் அகர்கரை சந்திக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. கிடைத்த தகவலின்படி, அஜித் அகர்கரின் பதவிக்காலம் குறித்து முடிவெடுப்பதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும். அகர்கரின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு தரப்பினர் பிசிசிஐ புதிய தேர்வுக்குழு தலைவரை நியமிக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

இந்திய அணியின் தலைமைத் தேர்வாளராக அஜித் அகர்கரின் பதவிக்காலம் இந்த 2026ம் ஆண்டு வருகின்ற செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இருப்பினும், விதிகளின்படி, அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படலாம். அஜித் அகர்கரின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான பிசிசிஐ-யின் நோக்கம், 2027 உலகக் கோப்பையுடனும் தொடர்புடையது. அந்த ஐசிசி போட்டித் தொடர் வரை அவரைத் தக்கவைக்க பிசிசிஐ விரும்புகிறது. இருப்பினும், அகர்கரைச் சந்தித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.

ALSO READ: 2வது நாளில் மாறும் நேரம்.. இந்தியா – இலங்கை போட்டி எப்போது தொடங்கும்?

தகவல்களின்படி, முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் குறித்து தேர்வாளர்களுக்கும் பிசிசிஐ-க்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு இந்த சந்திப்பு நடைபெறுகிறது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு கடந்த 2025ம் ஆண்டு ஆண்டு ரோஹித் ஷர்மாவை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்திருந்தது.

Follow Us