தானம் செய்யப் போறீங்களா?.. தயவுசெய்து இதெல்லாம் யோசித்து பண்ணுங்க!
Chanakya Niti: தானம் அனைத்து மதங்களிலும் முக்கியமானது. ஆனால், நம் நிதிநிலையை கருத்தில் கொண்டு தானம் செய்ய வேண்டும். அளவுக்கு அதிகமாகவோ, கடனாகவோ தானம் செய்யக்கூடாது. தானம் பெறுபவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். நன்றி மறப்பவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் தானம் செய்வதை தவிர்க்க வேண்டும் என ஆச்சார்ய சாணக்கியர் கூறியுள்ளார்.

தானம் (Donate) என்பது அனைத்து மதங்களிலும் முதன்மையான பழக்க வழக்கங்களில் கடைபிடிக்கப்படுவதாகும். ஒருவருக்கு தேவைப்படும் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, பணம் என இந்த உலகத்தில் எதுவாக இருந்தாலும் நாமாக மனமுவந்து வந்து வழங்குவதே தானமாகும். ஆன்மிகத்தைப் (Spiritual) பொறுத்தவரை மிகப்பெரிய தானமாக பார்க்கப்படுவது நிதானம் ஆகும். அதுவே பாசிட்டிவ் எண்ணங்களை பரப்பி நம்மை பக்குவமாக யோசிக்க வைத்து பல நல்ல காரியங்களை செய்யவைக்கும். என்றைக்கும் நாம் தானம் செய்வதை தம்பட்டம் அடித்து சொல்லவே கூடாது. அது நமக்கே எதிராக மாறி அத்தகைய செயலால் கிடைக்க வேண்டிய புண்ணியம் கூட கிட்டாமல் போய்விடும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் அன்னதானம், இரத்த தானம் என பல வகையும் இதில் உள்ளது. அவசர காலத்தில் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வது தவறில்லை. ஆனால் அது எப்படி இருக்க வேண்டும் என தத்துவ ஞானியாக அறியப்படும் ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்ய நீதியில் கூறியுள்ளார். அதனைப் பற்றிப் பார்க்கலாம்.
இதெல்லாம் கவனத்தில் இருக்க வேண்டும்
நிதி நிலைமை
தானம் செய்வது நல்ல விஷயம் தான். ஆனால் உங்களின் நிதி நிலைமையை மனதில் கொண்டு தானம் செய்யுங்கள் . சிலர் பெரும்பாலும் ஏழைகளுக்கு தங்கள் சக்திக்கு ஏற்ப தானம் செய்கிறார்கள். சிலர் தங்கள் பெயர் வெளியே தெரிய வேண்டும் ஆடம்பரமான முறையில் தானம் செய்கிறார்கள். ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, தானம் செய்வது ஒரு நல்ல செயலாக இருந்தாலும் நிதி நிலைமையை மனதில் கொண்டு தானம் செய்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான வழியில் தானம் செய்வதும், சக்தி மீறி கடன் வாங்கி செய்வதும் உங்களுக்கு நல்லதல்ல என அவர் கூறுகிறார்.




சிலர் தங்கள் நிதி நிலைமையை விட அவர்கள் சொல்லிவிட்டார்கள், இவர்கள் கூறி விட்டார்கள் என உணர்ச்சிகளின் அடிப்படையில் யோசிக்காமல் தானம் செய்கிறார்கள். இது நன்கொடையாளர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே சிந்திக்காமல் செய்யப்படும் தானம் தவறான பாதையில் செல்லலாம். எனவே முன் முடிவு செய்வது நல்லது. இது எதிர்காலத்தில் நிதி சிக்கல்கள் ஏற்படுவதை தடுக்கும்.
உரிய மரியாதை
தானம் கொடுப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்றும், தானம் பெறுபவர்கள் கஷ்டப்பட்டவர்கள் என்றும் அர்த்தமில்லை. சில நேரங்களில் எல்லாம் இருப்பவர்கள் கூட தானம் பெறுவார்கள். அதனால் எக்காரணம் கொண்டும் தான் பெறுபவர்களை மரியாதையுடன் நடத்துங்கள். அதேசமயம் யாருக்கு என கொடுத்தால் தகும் என்பதை அறிந்தும் செயல்படுவது சால சிறந்தது.
நன்றி மறப்பவர்கள்
உங்களைச் சுற்றி இருக்கும் உறவினர்கள், நண்பர்கள், சக தொழிலாளர்கள் என யாராக இருந்தாலும் தானம் செய்ய மறுக்காதீர்கள். அதேசமயம் ஒரு உதவி என உங்களிடம் கேட்டால் செய்ய இயலாவிட்டால் முடியாது என சொல்லி விடுங்கள். இல்லாவிட்டால் உறவில் விரிசல் உண்டாகலாம். அதேபோல் உதவி பெற்றுக் கொண்டு நன்றி மறந்து செயல்படுவர்களுக்கு எவ்வித பலனையும் செய்யாதீர்கள். மேலும் பணக்காரர்களுக்கு எக்காரணம் கொண்டும் தானம் செய்யாதீர்கள். அதுமட்டுமல்லாமல் யாருக்கும் தேவைக்கு அதிகமாக தானம் செய்வது தவறாகும். பெரிய பெயர் கிடைக்கும் என பணக்காரர்களுக்கு தானம் செய்வது உங்கள் தானத்தின் பலனைத் தராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
(ஆன்மிக மற்றும் சாணக்கிய நீதி அடிப்படையில் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)