AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Pitru Paksha 2025: பித்ரு பக்‌ஷ காலம்.. வீட்டில் இதெல்லாம் இருந்தால் நல்லதல்ல

Mahalaya Amavasya: 2025-ம் ஆண்டு பித்ரு பக்ஷம் செப்டம்பர் 8ம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ம் தேதி மகாளய அமாவாசையுடன் நிறைவடைகிறது. இந்தக் காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது முக்கியம். வீட்டை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பது அவசியம் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

Pitru Paksha 2025: பித்ரு பக்‌ஷ காலம்.. வீட்டில் இதெல்லாம் இருந்தால் நல்லதல்ல
பித்ரு பக்‌ஷா காலம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 27 Aug 2025 12:45 PM IST

இந்து மதத்தில் முன்னோர் வழிபாடு என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அப்படியான நிலையில் கடவுளுக்கு இணையான வழிபாடாக இது கருதப்படுகிறது. தெய்வங்களைப் போல முன்னோர்களும் நம்முடன் இருந்து நம்மையும் குடும்பத்தினரையும் காப்பதாக நம்பப்படுகிறது. இப்படியான நிலையில் சாஸ்திரத்தில் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதியானது முன்னோர்களை வழிபட சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் தை, ஆடி, மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதில் புராட்டாசி மாதம் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை (பெரிய அமாவாசை) என அழைக்கப்படுகிறது. இந்த அமாவாசைக்கு முந்தைய காலம் பித்ரு பக்‌ஷ காலமாக கருதப்படும்.

2025 ஆம் ஆண்டு பித்ரு பக்‌ஷ காலம் எப்போது?

2025 ஆம் ஆண்டு ஆவணி மாதம் பௌர்ணமியானது வரும் செப்டம்பர் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாளான செப்டம்பர் 8ம் தேதி தொடங்கி கிட்டதட்ட 16 நாட்கள் நீடிக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் அமாவாசையுடன் இந்த காலமானது நிறைவடைகிறது. அதன்படி செப்டம்பர் 21ஆம் தேதி மஹாளய அமாவாசை வருகிறது. இந்த காலக்கட்டம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவதற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

Also Read: Evil Eye: கண் திருஷ்டி பிரச்னையா?.. வீட்டு வாசலில் இந்த சின்ன விஷயம் செய்தாலே போதும்!

பித்ரு பக்ஷம்  நாட்களில் முன்னோர்கள் தொடர்பான சடங்குகளைச் செய்வது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மத நம்பிக்கைகளின்படி, பித்ரு பக்ஷத்தின் போது, ​​நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்கள் சந்ததியினரின் வீடுகளில் வசிக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த நேரத்தில் வீட்டை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முன்னோர்களின் ஆசிகளைப் பெறவும், மகிழ்ச்சியையும் அமைதியையும் பராமரிக்கவும் விரும்பினால், பித்ரு பக்ஷம் தொடங்குவதற்கு முன்பு வீட்டிலிருந்து சில பொருட்களை அகற்ற வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

Also Read: Lakshmi Kuberar: செல்வ வளம் பெருக வேண்டுமா? – லட்சுமி குபேரரை வழிபடுங்க!

அகற்ற வேண்டிய பொருட்கள்

  1. உடைந்த பாத்திரங்கள்:  நம்முடைய வீடுகள் உடைந்த அல்லது விரிசல் அடைந்த பாத்திரங்களில் புழக்கத்தில் இன்றளவும் நியாபகம் வைக்கும் வகையில் பயன்படுத்தி வருவார்கள். அத்தகைய சேதமடைந்த பாத்திரங்களை வீட்டில் வைக்கக்கூடாது. இதுபோன்ற பாத்திரங்கள் வீட்டில் எதிர்மறையை ஏற்படுத்தும். பித்ரு பக்ஷத்திற்கு முன் இந்த பாத்திரங்களை வீட்டிலிருந்து அகற்ற வேண்டும். உடைந்த பாத்திரங்கள் வீட்டில் நிதி நெருக்கடி மற்றும் துரதிர்ஷ்டத்திற்கு வழிவகுக்கும்.
  2. உடைந்த சிலை : உங்கள் வீட்டில் உடைந்த சிலை அல்லது கிழிந்த கடவுள் படம் இருந்தால், அதை உடனடியாக அகற்றவும். வீட்டில் இதுபோன்ற பொருட்களை வைத்திருப்பது நல்லதல்ல என்று நம்பிக்கை உள்ளது. நீங்கள் அவற்றை ஓடும் நீரில் அல்லது ஒரு மரத்தின் கீழ் வைத்து விட்டு வரலாம்.
  3. பழுதான கடிகாரம்: வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு கடிகாரம் வாழ்க்கையில் வேகம் மற்றும் முன்னேற்றத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வீட்டில் ஒரு உடைந்த கடிகாரம் இருப்பது துரதிர்ஷ்டத்தை ஈர்க்கிறது. இது குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், பித்ரு பக்ஷம் தொடங்குவதற்கு முன்பு அதை சரிசெய்யவும் அல்லது வீட்டிலிருந்து அகற்றவும்.
  4. உலர்ந்த தாவரங்கள்: வீட்டில் உலர்ந்த செடிகளை வைத்திருப்பது எதிர்மறையை அதிகரிக்கும். பித்ரு பக்ஷத்தின் போது அவற்றை வீட்டில் வைத்திருப்பது அசுபமாகக் கருதப்படுகிறது, எனவே பித்ரு பக்ஷம் தொடங்குவதற்கு முன்பு, இந்த செடிகளை உங்கள் வீட்டிலிருந்து அகற்றிவிட்டு பசுமையான செடிகளை நடவும்.அவற்றை முறையாக பராமரிக்கவும்.
  5. துருப்பிடித்த பொருட்கள்: உங்கள் வீட்டில் துருப்பிடித்த பொருட்கள், உடைந்த தளவாடங்கள் அல்லது வேறு ஏதேனும் பயன்படுத்தப்படாத பொருட்கள் இருந்தால், பித்ரு பக்ஷம் தொடங்குவதற்கு முன்பு அவற்றை வீட்டிலிருந்து அகற்றவும். இந்த பொருட்கள் வீட்டில் எதிர்மறை சக்தியை பரப்புகின்றன.

(சாஸ்திர நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us