AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காலை, மாலை நவராத்திரி வழிபாடு.. எது சிறந்தது தெரியுமா?

Navratri Worship: 2025 ஆம் ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1 வரை கொண்டாடப்படுகிறது. காலைப் பூஜை சாத்வீகமானது, அமைதியானது, ஆன்மீக ஊக்கமளிப்பதாகக் கருதப்படுகிறது. மாலைப் பூஜை இருளை ஒழித்து ஒளியின் வெற்றியைக் குறிக்கிறது என சொல்லப்படுகிறது. ஆனாலும் இரு நேரங்களும் புனிதமானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை, மாலை  நவராத்திரி வழிபாடு.. எது சிறந்தது தெரியுமா?
நவராத்திரி வழிபாடு
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 23 Sep 2025 11:36 AM IST

நவராத்திரி பண்டிகை தான் இந்தியாவின் பண்டிகை காலத்தின் தொடக்கமாகும். 2025 ஆம் ஆண்டுக்கான நவராத்திரி பண்டிகை செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி நிறைவடைகிறது. இதில் 9 நாட்கள் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிக்கான வழிபாடுகள் தலா 3 நாட்கள் பிரிக்கப்பட்டு வழிபாடு நடைபெறும். நவராத்திரி பண்டிகை என்பது பக்தி, அறநெறு மற்றும் பெண் சக்தி வழிபாட்டுடன் தொடர்புடையதாகும். இந்த பண்டிகையின் ஒன்பது நாட்களிலும், துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் முழு நம்பிக்கையுடன் வழிபடப்படுகின்றன. இருப்பினும், இந்த நவராத்திரி பண்டிகைகளின் போது காலையிலோ அல்லது மாலையிலோ தேவியை வழிபடுவது சிறந்ததா என்பது குறித்து பலருக்கு சந்தேகம் உள்ளது. காரணம் பணி மற்றும் இன்னபிற காரணங்களால் ஏதேனும் ஒரு வேளையில் வழிபட தவறுகிறோம். ஆனால் சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, இரண்டும் புனிதமான நேரங்களாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், வழிபடும் நேரத்தில் என்ன சிறப்பு என்பதைப் பற்றிக் காணலாம்.

காலை vs மாலை நேரம் எது சிறந்தது?

காலை நேரம்

காலை நேரத்தைப் பொறுத்தவரை அது சாத்வீகமானது. அதாவது, தூய்மையானது அமைதியான சூழலை கொண்டது. இது ஆன்மீக ரீதியாக ஊக்கமளிப்பதாக நம்பப்படுகிறது. சூரிய உதயம் அல்லது பிரம்ம முகூர்த்தத்தின் போது பூஜை செய்வது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. நெய் தீபம் ஏற்றி, மந்திரங்களை ஓதி, காலையில் பூக்களை சமர்ப்பிப்பது நேர்மறையான சூழ்நிலையை உருவாக்கும் என நம்பப்படுகிறது.

Also Read:  தொடர் விடுமுறை.. நவராத்திரியை சிறப்பாக்க போக வேண்டிய அம்மன் கோயில்கள்!

ஆன்மீக ரீதியாக, காலை நேர பூஜை என்பது உடல் மற்றும் மனம் இரண்டின் விழிப்புணர்வையும் குறிக்கிறது. இது நாள் முழுவதும் உங்களைப் பாதுகாக்க கடவுளின் அருள் இருப்பதற்கான நம்பிக்கையாகும். எனவே, இந்த நேரத்தில் செய்யப்படும் பிரார்த்தனைகள் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பைத் தரும் என்று நம்பப்படுகிறது.

மாலை நேரம்

அதேசமயம் மாலை நேர பூஜை பயனுள்ளதாக இருக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இது இருளை ஒழித்து ஒளியின் வெற்றியைக் குறிக்கிறது. காலை மற்றும் மதிய நேர பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். இருப்பினும், மாலை நேர பூஜையின் போது ஏற்றப்படும் விளக்குகள். ஆரத்தியுடன், அது வீட்டிற்கு தெய்வீக ஒளியைத் தருகிறது. இது குடும்பத்தை மேம்படுத்துகிறது. மாலை நேர சூழ்நிலை ராஜசிக இயல்புடையது. இது மகிழ்ச்சியைக் குறிக்கும்.

Navaratri:  நவராத்திரி தொடங்கும் முன் வீட்டுக்கு கொண்டு வரவேண்டிய பொருட்கள்!

நவராத்திரியின் போது மாலை நேர பூஜை பல மரபுகளில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் துர்கா தேவி இருளையும் எதிர்மறையையும் நீக்குபவர் என்று நம்பப்படுகிறது. இந்நேரத்தில் நைவேத்தியம் வைப்பது மிக முக்கியமானது. காலை மற்றும் மாலை இரண்டும் தனித்தனி முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. இருப்பினும், பல பக்தர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பூஜை செய்ய விரும்புகிறார்கள். காலை பூஜையானது மந்திரங்கள், பூக்கள் மற்றும் விளக்குகளுடன் செய்யப்படும், அதே வேளையில், மாலை பூஜையில் ஆரத்தி, கீர்த்தனைகள் மற்றும் நைவேத்தியம் ஆகியவை இடம்பெற வேண்டும்.

நீங்கள் எந்த வேளையில் வழிபாடு செய்தாலும் துர்கா தேவியை முழு மனதுடன் வணங்கினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us