நவராத்திரி - Navratri
இந்து மதத்தில் புரட்டாசி மாதம் ஆன்மிக காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் மிகப்பெரிய அமாவாசையான மஹாளய அமாவாசை முடிந்து பின்னர் வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விரதம் என்பது பெண் தெய்வங்களை வழிபடும் காலமாகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் 3 நாட்கள் வீரத்தை வேண்டி துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி லட்சுமியையும், இறுதி மூன்று நாட்கள் கல்வி, கலைகளை வேண்டி கலைமகளான சரஸ்வதியையும் வழிபடுகின்றனர். இதன் கடைசி இரு நாட்கள் சரஸ்வதி பூஜை என்ற பெயரில் கல்வி பொருட்கள் வைத்தும், ஆயுத பூஜை என்ற பெயரில் நம்முடைய தொழில் சம்பந்தப்பட்ட பொருட்கள் வைத்து வீடுகளில், கடைகளில் வழிபாடு மேற்கொள்ளப்படும். நவராத்திரி காலத்தில் வீடுகள், ஆலயங்களில் கொழு கண்காட்சி வைக்கப்படும். மேலும் மைசூர், குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இப்படியான நவராத்திரி திருவிழா தொடர்பான தகவல்களை நாம் இங்கு காணலாம்
யானைகள் படைசூழ பிரம்மாண்ட தசரா திருவிழா.. மைசூருவில் கொண்டாட்டம்!
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தசராவானது 9 நாட்கள் நவராத்திரி கொண்டாட்டத்தின் இறுதி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ஆன்மிக நம்பிக்கையின்படி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மைசூர் அரண்மனையில் யானைகள் படைசூழ தசரா விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
- C Murugadoss
- Updated on: Oct 3, 2025
- 12:39 pm IST
தூத்துக்குடி முத்தாரம்மன் ஆலயத்தில் களைகட்டிய தசரா திருவிழா!
நவராத்திரி விழா இந்தியா முழுவதும் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். பல்வேறு தரப்பினரும் காளி வேடமணிந்து தசராவை கொண்டாடுவர். அந்த வகையில் இந்த ஆண்டு தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
- C Murugadoss
- Updated on: Oct 3, 2025
- 12:21 pm IST
நவராத்திரி ஸ்பெஷல்.. கோட்டை மாரியம்மன் கோயில் சிறப்பு பூஜை!
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் 9 நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல தென் மாவட்டங்களிலும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஓசூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
- C Murugadoss
- Updated on: Sep 30, 2025
- 14:14 pm IST
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட்டம்.. நல்ல நேரம் எது?
2025 அக்டோபர் 1 அன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் நிறைவு நாளாக முப்பெரும் தேவியரையும் வணங்கும் இந்நிகழ்வுக்கு வீடுகள், வாகனங்கள், தொழில் இடங்களை சுத்தம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். அதன் நல்ல நேரம் தொடர்பான தகவல்களைக் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 30, 2025
- 12:13 pm IST
குலசேகரப்பட்டினம் தசரா.. பக்தர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிப்பு!
Kulasekarapattinam Dasara 2025: குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தூத்துக்குடி காவல்துறை அறிவித்துள்ளது. சாதி, மத அடையாள ஆடைகள், நிஜ ஆயுதங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.சிசிடிவி கண்காணிப்பு, விரிவான மருத்துவ மற்றும் அடிப்படை வசதிகள், வாகன நிறுத்தம் என அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 30, 2025
- 11:15 am IST
Navratri 2025: நவராத்திரி 9வது நாள்.. இன்று எப்படி வழிபடலாம்?
Navratri 2025 Day 9: நவராத்திரி விழா சித்திதாத்ரி தேவி வழிபாட்டுடன் இன்று (செப் 30, 2025) நிறைவடைகிறது. துர்கா தேவியின் ஒன்பதாவது வடிவமான சித்திதாத்ரி, பக்தர்களுக்கு எட்டு ஆன்மீக சக்திகளையும் மோட்சத்தையும் அருள்கிறார். அமைதி, இரக்கம், ஞானம் ஆகியவற்றை அளிக்கும் இவரை இளஞ்சிவப்பு நிறத்தில் வழிபடுவது சிறப்பாகும்.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 30, 2025
- 07:58 am IST
Vastu Tips: சரஸ்வதி பூஜை நாளில் பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள்!
சரஸ்வதி பூஜை நாளில் வீட்டில் நேர்மறை ஆற்றல், ஞானம், செல்வம் பெற வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவது அவசியமான ஒன்றாகும். இதில் சரஸ்வதி தேவி சிலையை வடக்கு திசையில் வைப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் கிழக்கு நோக்கி விளக்கேற்றுவதும் வாழ்வில் வெற்றியை உறுதி செய்யும்.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 29, 2025
- 14:30 pm IST
Vidyarambham: கல்வியின் தொடக்கம்.. வீட்டில் வித்யாரம்பம் செய்யும் வழிமுறைகள்!
Vijayadashami 2025: விஜயதசமி தீமையை நன்மை வென்ற நாளாக பார்க்கப்படுகிறது. இது புதிய தொடக்கங்களுக்கு உகந்த நேரமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கல்விக்கு வித்யாரம்பம் என்ற நிகழ்வு நடைபெறுகிறது. கோவில்களில் மட்டுமல்லாமல், வீட்டிலேயே எளிமையான முறையில் இந்த வித்யாரம்ப சடங்கை மேற்கொள்ளலாம். அதனைப் பற்றிக் காண்போம்.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 29, 2025
- 12:25 pm IST
தமிழ்நாட்டில் 2 இடங்களில் தனி கோயில்களில் எழுந்தருளியுள்ள சரஸ்வதி தேவி!
கல்வி மற்றும் ஞானத்தின் அதிபதியான சரஸ்வதி தேவிக்கு நவராத்திரி விழாவின் கடைசி நாளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தமிழகத்தில் அரிதாக இரண்டு இடங்களில் தனிச்சிறப்புமிக்க சரஸ்வதி கோயில்கள் அமைந்துள்ளன. ருவாரூர் மாவட்டம் கூத்தனூர் மற்றும் திருநெல்வேலியில் அமைந்திருக்கும் கோயில்கள் பற்றிக் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 29, 2025
- 11:46 am IST
Saraswati puja: சரஸ்வதி பூஜை.. வீட்டில் வழிபாடு மேற்கொள்வது எப்படி?
2025 அக்டோபர் 1 அன்று வரும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, ஞானம், தொழில் வளர்ச்சிக்குரிய இப்புனித நாளில், வீட்டைச் சுத்தம் செய்து, பாடப்புத்தகங்கள், கணக்குப் புத்தகங்கள் வைத்து, வழிபட வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 29, 2025
- 11:05 am IST
Navratri: நவராத்திரி 8ம் நாள்.. துர்கா அஷ்டமி வழிபாடு செய்வது எப்படி?
Navratri 2025 day 8: 2025 நவராத்திரி துர்கா அஷ்டமி, மகாகௌரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித நாளாகும். இந்நாளில் மகாகௌரியை வழிபடுவதால் தூய்மை, அமைதி, செழிப்பு மற்றும் பாவங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது. அதிகாலையில் நீராடி, வெள்ளை நிறப் பூக்கள், தேங்காய், இனிப்புகளுடன் பூஜை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 29, 2025
- 07:00 am IST
Navratri 2025: துர்கா தேவியின் நெற்றியில் சிலந்தி சின்னம் என்ன அர்த்தம் தெரியுமா?
துர்கா தேவியின் நெற்றியில் உள்ள சிலந்தி வடிவம் நவராத்திரி கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இது வெறும் அலங்காரமல்ல. இதற்கு பின்னால் பல தகவல்களும், நம்பிக்கைகளும் உள்ளன. சிலந்தி வடிவம் ஏன் இருக்கிறது, அதன் பின்னால் இருக்கும் அர்த்ஹ்டம் என்ன என்பதை பார்க்கலாம்
- C Murugadoss
- Updated on: Sep 28, 2025
- 21:15 pm IST
Navratri Day 6: நவராத்திரி 6ம் நாள்.. காத்யாயனி தேவியை இப்படி வழிபடுங்க!
2025 நவராத்திரியின் ஆறாம் நாளில், பார்வதி அன்னையின் வீர வடிவான காத்யாயனி தேவி வழிபடப்படுகிறார். தைரியம், தடைகளை நீக்குதல், திருமண நல்லிணக்கம் அருளும் இத்தேவிக்கு, செப்டம்பர் 27 அன்று சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நாள் புரட்டாசி சனிக்கிழமையாகவும், ஷஷ்டி திதியாகவும் அமைவது மேலும் சிறப்பாகும்.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 27, 2025
- 08:12 am IST
Navratri 2025: நவராத்திரி 5ம் நாள்.. ஸ்கந்தமாதா தேவி வழிபாட்டு முறைகள் இதோ!
Navratri Day 5 Worship: நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் துர்க்கா தேவியின் ஒவ்வொரு வடிவமும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது, அந்த வகையில் செப்டம்பர் 26 ஆம் தேதியான இன்று ஸ்கந்தமாதா தேவி வழிபாட்டு முறைகள் பற்றி காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 26, 2025
- 07:03 am IST
Navratri 2025: நவராத்திரி 4ம் நாள்.. துர்க்கை வழிபாட்டு முறைகள் இதோ!
Navratri 2025 Day 4: நவராத்திரியின் நான்காம் நாள் கூஷ்மாண்டா தேவியை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் செய்ய வேண்டிய பூஜை முறைகள், சிறந்த நேரங்கள், மற்றும் மஞ்சள் நிற ஆடை அணிவதன் முக்கியத்துவம் குறித்து நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 25, 2025
- 07:14 am IST