AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்களே கவனியுங்கள்… பொது தரிசன நேரம் இதுதான்!

Madurai Meenakshi Amman: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக நாளில் காலை 10 மணி முதல் பொதுமக்களுக்கு இலவச தரிசன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்களே கவனியுங்கள்… பொது தரிசன நேரம் இதுதான்!
மீனாட்சிImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 17 Sep 2026 05:00 AM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கான தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக நாளில் காலை 10 மணி முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் தெற்கு கோபுரங்கள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, கிழக்கு கோபுரம் வழியாக வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 17 முதல் 20ஆம் தேதி வரை இலவச தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோயில் மற்றும் சுற்றுப்புறங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதால், பக்தர்கள் நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், பக்தர்களுக்கான தரிசன ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காலை 10 மணி முதல் பொது தரிசனம்

கும்பாபிஷேக நாளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் காலை 10 மணி முதல் பொது தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மேற்கு மற்றும் தெற்கு கோபுரங்கள் வழியாக கோயிலுக்குள் நுழைந்து, கிழக்கு கோபுரம் வழியாக வெளியேறும் வகையில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டணமின்றி தரிசனம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 17 முதல் 20ஆம் தேதி வரை அனைத்து வரிசைகளிலும் இலவச தரிசனம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் கட்டணம் செலுத்தாமல் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரரை தரிசிக்க முடியும்.

பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்

பெருமளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கோயில் மற்றும் சுற்றுப்புறங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மருத்துவ உதவி மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Also Read: மதுரை போகப்போறீங்களா? பக்தர்களுக்காக பறந்து வந்த தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு!

போக்குவரத்தில் மாற்றம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை, ஆவணி மூல வீதி மற்றும் மாசி வீதிகளில் வாகன போக்குவரத்துக்கும் நிறுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களது வாகனங்களை குறிப்பிட்ட பார்க்கிங் பகுதிகளில் நிறுத்திவிட்டு, ஏற்பாடு செய்யப்பட்ட வழித்தடங்கள் மூலம் கோயிலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு வேண்டுகோள்

கும்பாபிஷேக விழாவில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்க உள்ளதால், அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து, கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் வழிகாட்டுதலின்படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து பொறுமையுடன் செயல்படுவது விழா ஏற்பாடுகள் சீராக நடைபெற உதவும்.

பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.

Follow Us