AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வேண்டினால் போதும்… உடனே அருளும் சிந்தாமணி விநாயகர்! எங்கே உள்ளது?

Ujjain Chintamani Ganesh Temple: மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் பக்தர்களின் வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றி 'இச்சமான் கணேஷ்' என்று போற்றப்படும் அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீராமரும் சீதாதேவியும் வனவாசத்தின் போது வழிபட்ட வரலாற்றுப் பெருமை கொண்ட இக்கோவில், மராட்டிய ராணி அகல்யாபாய் ஹோல்கரால் கற்களைக் கொண்டு கலைநயத்துடன் புனரமைக்கப்பட்டது.

வேண்டினால் போதும்… உடனே அருளும் சிந்தாமணி விநாயகர்! எங்கே உள்ளது?
சிந்தாமணி விநாயகர்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 16 Sep 2026 12:20 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் அமைந்துள்ள சிந்தாமணி விநாயகர், பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதால் ‘இச்சமான் கணேஷ்’ என்றும் அழைக்கப்படுகிறார். புராணங்களில் சொல்லப்படும் சிந்தாமணி கல்லைப் போல கேட்கும் வரங்களை அள்ளித் தரும் வல்லமை இவருக்கு உண்டு. வனவாசத்தின் போது ஸ்ரீராமர், சீதா தேவி மற்றும் லட்சுமணர் இத்தலத்திற்கு வந்து விநாயகரை வழிபட்டுள்ளனர். சீதையின் தாகத்தைப் போக்க லட்சுமணர் அம்ப எய்து உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நீரூற்று இன்றளவும் இங்கு கிணறாக உள்ளது. 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில், பின்னாளில் மராட்டிய ராணி அகல்யாபாய் ஹோல்கரால் கல்லாலான சபா மண்டபத்துடன் புனரமைக்கப்பட்டது. பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற கோவில் சுவரில் சுவஸ்திகா சின்னத்தைத் தலைகீழாக வரைந்து, வேண்டுதல் பலித்ததும் அதனை நேராக வரைந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சதுர்த்தி திதி, புதன்கிழமைகள் மற்றும் 9 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா ஆகியவை இக்கோவிலில் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

கேட்ட வரங்களை அள்ளித் தரும் இச்சமான் கணேஷ்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் நகரில் அமைந்துள்ள சிந்தாமணி விநாயகர், தன்னை நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதால் ‘இச்சமான் கணேஷ்’ என்று பரவலாக அழைக்கப்படுகிறார். புராணங்களில் குறிப்பிடப்படும் சிந்தாமணி எனும் அபூர்வக் கல்லைப்போல, பக்தர்களின் எண்ணங்களை ஈடேற்றும் வல்லமை கொண்டவராக விளங்குவதால் இவருக்கு ‘சிந்தாமணி கணேஷ்’ என்ற பெயரும் உருவானது. குறிப்பாக சதுர்த்தி திதி மற்றும் புதன்கிழமைகளில் இவரைத் தரிசிப்பது அளப்பரிய நன்மைகளைத் தரும் என்பது நம்பிக்கையாகும்.

ஸ்ரீராமரின் வழிபாடும் கோவில் வரலாற்றுப் பின்னணியும்

புராண வரலாற்றுப்படி, வனவாசத்தின் போது ஸ்ரீராமர், சீதா தேவி மற்றும் லட்சுமணர் ஆகியோர் இத்தலத்திற்கு வருகை தந்து இறைவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வேளையில் சீதா தேவியின் தாகத்தைத் தணிக்க லட்சுமணர் தனது அம்பினால் பூமியைத் துளைத்து உருவாக்கிய நீரூற்று, இன்றளவும் கோவிலில் கிணறாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. பழமையான இக்கோவில், 12-ஆம் நூற்றாண்டில் மறுசீரமைக்கப்பட்டு, பின்னதாக மராட்டிய ராணி அகல்யாபாய் ஹோல்கரின் ஆட்சிக்காலத்தில் தனித்துவமான கட்டிடக்கலை அமைப்பில் மாளிகையைப் போன்று கல்லால் கட்டப்பட்டு தற்போதைய வடிவத்தைப் பெற்றது.

Also Read: மதுரையில் குவியும் பக்தர்கள்: கும்பாபிஷேக நாளில் சித்திரை வீதிக்குள் செல்ல யாருக்கு அனுமதி?

தலைகீழ் சுவஸ்திகா நேர்த்திக்கடனும் வழிபாட்டு முறைகளும்

இக்கோவிலின் கருவறையில் விநாயகப் பெருமான் சித்தி மற்றும் ரித்தியுடன் இணைந்து காட்சியளிக்கிறார். இவரைத் தரிசிப்பதால் வாழ்வில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் வெற்றி கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறக் கோரி கோவிலின் பின்புறச் சுவரில் சுவஸ்திகா சின்னத்தைத் தலைகீழாக வரைகின்றனர்; பின்னர் எண்ணம் ஈடேறியதும் மீண்டும் வந்து அதனை நேராக வரைந்து நன்றியைச் செலுத்துகின்றனர். சிவந்த மலர்கள், எள் லட்டு மற்றும் மோதகம் கொண்டு நித்திய பூஜைகள் நடத்தப்படும் இக்கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா 9 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.

Follow Us