AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரையில் குவியும் பக்தர்கள்: கும்பாபிஷேக நாளில் சித்திரை வீதிக்குள் செல்ல யாருக்கு அனுமதி?

Madurai Meenakshi Temple: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்டம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் சித்திரை, ஆவணி மூல வீதி மற்றும் மாசி வீதிகளில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு, அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே சித்திரை வீதிக்கு அனுமதிக்கப்படுவர். பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்க C2 ரவுண்டானா, எல்டீஸ் நகர் மற்றும் டி.பி.ரோடு உள்ளிட்ட 4 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரையில் குவியும் பக்தர்கள்: கும்பாபிஷேக நாளில் சித்திரை வீதிக்குள் செல்ல யாருக்கு அனுமதி?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 15 Sep 2026 14:00 PM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் முக்கிய வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி சித்திரை, ஆவணி மூல வீதி மற்றும் மாசி வீதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. கும்பாபிஷேக தினத்தன்று உரிய அனுமதி அட்டை வைத்துள்ள நபர்கள் மட்டுமே சித்திரை வீதிக்குள் அனுமதிக்கப்படுவர். பக்தர்களின் வசதிக்காக C2 ரவுண்டானா, எல்டீஸ் நகர், டி.பி.ரோடு உட்பட 4 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூரிலிருந்து வரும் பயணிகள் இந்த இடைக்கால பேருந்து நிலையங்களைப் பயன்படுத்தி தங்களின் பயணத்தைத் தொடரலாம். மேலும், அனைவரும் விழாவைக் கண்டு தரிசிக்க நகரின் 51 முக்கிய சந்திப்புகளில் LED திரைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தத் திரைகள் மூலம் கும்பாபிஷேக நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

விழா மற்றும் போக்குவரத்து தடை

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி, பக்தர்களின் பாதுகாப்பையும் நெரிசலற்ற வழிபாட்டையும் உறுதிசெய்யும் வகையில், செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கோவிலைச் சுற்றியுள்ள சித்திரை, ஆவணி மூல வீதி மற்றும் மாசி வீதிகளில் அனைத்து வகையான வாகனப் போக்குவரத்திற்கும் தட விதிக்கப்பட்டுள்ளது.

சித்திரை வீதி நுழைவு மற்றும் அனுமதி

கும்பாபிஷேக நிகழ்வின் முக்கிய நாளில் சித்திரை வீதிக்குள் செல்லக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அனுமதி அட்டை (Pass) வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே சித்திரை வீதிக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி அட்டையில் குறிப்பிட்டுள்ள வண்ணக் குறியீடுகளின்படி (Color-coded passes) மட்டுமே பக்தர்கள் உரிய பாதைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Also Read: 17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த புதிய யானை.. விநாயகர் சதுர்த்தியில் சிறப்பு ஏற்பாடு..

தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு

நகரத்திற்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காகவும் நகரின் முக்கிய 4 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி C2 ரவுண்டானா, எல்டீஸ் நகர், டி.பி.ரோடு உள்ளிட்ட இடங்களில் இந்த இடைக்காலப் பேருந்து நிலையங்கள் செயல்படும்.

LED திரைகள் மூலம் நேரலை

கும்பாபிஷேக நிகழ்வை நேரில் காண இயலாத லட்சக்கணக்கான பக்தர்களுக்காக மாநகர் முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் விழா நிகழ்வுகளைத் தெளிவாகக் கண்டு தரிசிக்கும் பொருட்டு, மதுரையின் 51 முக்கியச் சந்திப்புகளில் பிரம்மாண்ட LED திரைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.

பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.

Follow Us