AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கடன் பிரச்சனை தீர வேண்டுமா? ஆடி செவ்வாய் அன்று இதை செய்யுங்கள்…

Aadi Sevvai Worship: ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகள் அம்பாள் மற்றும் பிற தெய்வங்களின் அருள் பெற மிகவும் சக்திவாய்ந்த நாட்களாகும். இந்த விசேஷ நாளில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நித்திய பிரதோஷ வேளையில் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று நெய் தீபமேற்றி வழிபட வேண்டும்.

கடன் பிரச்சனை தீர வேண்டுமா? ஆடி செவ்வாய் அன்று இதை செய்யுங்கள்…
நெய் தீபம்
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 22 Jul 2026 13:25 PM IST

ஆடி மாதம் முழுவதுமே அம்பாளுக்குரிய வழிபாட்டிற்குரிய காலமாக திகழ்ந்தாலும், இம்மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகள் ஆன்மீக ரீதியாக மிகவும் சக்திவாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் விரதங்களும் வழிபாடுகளும் குடும்பத்தில் செழிப்பைக் கொண்டுவருவதோடு, நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் சுப காரியத் தடைகளையும் அகற்றும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, மனித வாழ்க்கையில் பெரிய மன உளைச்சலைத் தரும் கடன் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற ஆடி செவ்வாய் வழிபாடு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.

நித்திய பிரதோஷ நேரத்தின் ஆன்மீக பலன்கள்

செவ்வாய்க்கிழமையன்று முழு உபவாசமாக இருந்து வழிபடுவது மிகுந்த நன்மையளிக்கும். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் எளிய உணவுகளை எடுத்துக்கொண்டு இறைவனை பிராத்திக்கலாம். வழக்கமாக மாதத்திற்கு இரண்டு முறை வரும் பட்ச பிரதோஷம் தவிர்த்து, தினமும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரமானது ‘நித்திய பிரதோஷம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆடி செவ்வாய்க்கிழமையின் இந்த மாலை வேளையில் இறைவனை நினைத்து வழிபாடு செய்வதால், பொருளாதார ரீதியான கடன் சுமைகள் மட்டுமின்றி பிறவிப் பிணிகளும் அகலும் என்பது ஆன்மீகச் சான்றோர்களின் கூற்றாகும்.

கடன் தொல்லை அகல செய்ய வேண்டிய பரிகார முறை

கடன் சுமையிலிருந்து விரைவாக விடுபட விரும்புவோர், ஆடி செவ்வாய்க்கிழமை மாலையில் வரும் நித்திய பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 – 6.00) தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள சிவன், முருகன், விநாயகர் அல்லது அம்மன் திருக்கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு மூலவருக்கு சிறப்பான அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி, “எனது கடன்கள் அனைத்தும் தடையின்றி விரைவில் அடைய வேண்டும்” என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். வழிபாடு நிறைவடைந்ததும், கோவிலுக்கு வெளியே இருக்கும் எளியவர் அல்லது பசியோடு இருக்கும் ஒருவருக்கு உணவு வாங்கி வழங்குவது இந்த வழிபாட்டின் மிக முக்கியமான பரிகாரப் பகுதியாகும்.

தொடர் வழிபாட்டின் அற்புத பலன்கள்

இந்த ஆன்மீக வழிபாட்டு முறையை ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையில் மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை; ஆடி மாதத்தில் வரும் அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் தொடரலாம். மேலும், உங்கள் கடன்கள் முற்றிலும் அடைந்து முடியும் வரை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் இந்த எளிய பிரதோஷ நேர வழிபாட்டை நம்பிக்கையோடு செய்து வருவது நற்பலன்களைத் தரும். தடைகளைத் தகர்த்து நிதி நெருக்கடியிலிருந்து விடுபட இந்த வழிபாடு பலருக்கும் உறுதுணையாக இருந்ததாகப் போற்றப்படுகிறது.

பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.

Follow Us