AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிகரிக்கும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் – வந்தாச்சு சிபிஐயின் அபய் ஏஐ

இதனை தவிர்க்க சிபிஐ அபய் ஏஐ என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு வரும் நோட்டீஸ்களை அது உண்மையா இல்லையா என தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளை தவிர்க்க முடியும். அது குறித்து விரிவா பார்க்கலாம்.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 15 May 2026 21:58 PM IST
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடிகளை தடுக்க, சிபிஐ தற்போது  அபய் (ABHAY) என்ற புதிய ஏஐ அடிப்படையிலான வெரிஃபிகேஷன் முறையை  அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடிகளை தடுக்க, சிபிஐ தற்போது அபய் (ABHAY) என்ற புதிய ஏஐ அடிப்படையிலான வெரிஃபிகேஷன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 / 5
இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், பொதுமக்களுக்கு வரும் சிபிஐ நோட்டீஸ் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை சில நிமிடங்களிலேயே சரிபார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், பொதுமக்களுக்கு வரும் சிபிஐ நோட்டீஸ் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை சில நிமிடங்களிலேயே சரிபார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 / 5
சமீப காலமாக சைபர் குற்றவாளிகள் தங்களை சிபிஐ, போலீஸ்,  அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் போல காட்டி மக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போலியான நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

சமீப காலமாக சைபர் குற்றவாளிகள் தங்களை சிபிஐ, போலீஸ், அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் போல காட்டி மக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போலியான நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

3 / 5
அந்த நோட்டீஸில் பண மோசடி, போதைப்பொருள் வழக்கு, வருமானவரித்துறை மோசடி  போன்ற வழக்குகளில் உங்கள் பெயர் உள்ளது என்று கூறப்படுகிறது. பின்னர் வீடியோ கால் மூலம் போலியான விசாரணை நடத்தி, நீங்கள் டிஜிட்டல் அரஸ்டில் இருக்கிறீர்கள் என்று பயமுறுத்துகின்றனர். இதன் மூலம், வங்கி விவரங்கள், ஓடிபி போன்ற தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது.

அந்த நோட்டீஸில் பண மோசடி, போதைப்பொருள் வழக்கு, வருமானவரித்துறை மோசடி போன்ற வழக்குகளில் உங்கள் பெயர் உள்ளது என்று கூறப்படுகிறது. பின்னர் வீடியோ கால் மூலம் போலியான விசாரணை நடத்தி, நீங்கள் டிஜிட்டல் அரஸ்டில் இருக்கிறீர்கள் என்று பயமுறுத்துகின்றனர். இதன் மூலம், வங்கி விவரங்கள், ஓடிபி போன்ற தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது.

4 / 5
இதனை தவிர்க்க சிபிஐ அபய் ஏஐ என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் மூலம் மக்கள் தங்களுக்கு வரும் நோட்டீஸ்களை அது உண்மையா இல்லையா என தெரிந்துகொள்ளலாம். இதற்காக சிபிஐ அதிகாரப்பூர்வ வெப் சைட்டிற்கு செல்ல வேண்டும். அதில் அபய் லோகோவை கிளிக் செய்ய வேண்டும். அதில் நம் மொபைல் நம்பர் கொடுத்து ஓடிபி மூலம் வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். பின்னர் நம் அந்த நோட்டீஸை அப்லோட் செய்தால் அது உண்மையா இல்லை போலியானதா என தெரிவிக்கும்.

இதனை தவிர்க்க சிபிஐ அபய் ஏஐ என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு வரும் நோட்டீஸ்களை அது உண்மையா இல்லையா என தெரிந்துகொள்ளலாம். இதற்காக சிபிஐ அதிகாரப்பூர்வ வெப் சைட்டிற்கு செல்ல வேண்டும். அதில் அபய் லோகோவை கிளிக் செய்ய வேண்டும். அதில் நம் மொபைல் நம்பர் கொடுத்து ஓடிபி மூலம் வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். பின்னர் நம் அந்த நோட்டீஸை அப்லோட் செய்தால் அது உண்மையா இல்லை போலியானதா என தெரிவிக்கும்.

5 / 5
Follow Us