AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செப்டம்பரில் குறைந்த செலவில் குதூகலப் பயணம் செய்ய சிறந்த இடங்கள்!

September Travel India: செப்டம்பர் மாதத்தில் பருவமழை குறைந்து மிதமான காலநிலையும் பசுமையான இயற்கை எழிலும் நிலவுவதால், இந்தியாவில் சுற்றுலா செல்ல இதுவே சிறந்த காலமாகும். கேரளா, கொடைக்கானல், லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்கள் குறைந்த கட்டணத்திலும் கூட்ட நெரிசலின்றியும் சுற்றிப் பார்க்க மிகவும் ஏற்றவை.

செப்டம்பரில் குறைந்த செலவில் குதூகலப் பயணம் செய்ய சிறந்த இடங்கள்!
செப்டம்பர் சுற்றுலாImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 05 Aug 2026 11:14 AM IST

செப்டம்பர் மாதம் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை குறையும் கால என்பதால் காலநிலை மிகவும் மிதமாக இருக்கும். இக்காலத்தில் இயற்கையின் பசுமை உச்சத்தில் இருப்பதோடு, குறைவான பயணச் செலவில் அமைதியாகச் சுற்றிப் பார்க்க முடியும். கேரளாவில் உள்ள மூணார் மற்றும் ஆலப்புழா பகுதிகள் மழைக்குப் பிந்தைய பசுமையோடும், குறைந்த தங்குமிடக் கட்டணங்களோடும் பயணிகளை வரவேற்கின்றன. வட இந்தியாவில் லடாக் பகுதிக்குச் செல்ல தெளிவான வானமும் மிதமான குளிரும் ஏற்ற சூழலைத் தருகின்றன. இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி மற்றும் தர்மசாலா பகுதிகள் இயற்கை விரும்பிகளுக்கு மிகச் சிறந்த தேர்வாக அமைகின்றன.

தென்னிந்தியாவில் கொடைக்கானலின் பனிமூட்டமான சூழல் மற்றும் சாரல் மழை சுற்றுலாப் பயணிகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. வார இறுதிநாட்களில் கூட்ட நெரிசலின்றி நிம்மதியாகக் நேரத்தைக் கழிக்க விரும்புவோருக்கு இந்த இடங்கள் மிகச் சிறந்த அனுபவத்தைத் தரும்.

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை படிப்படியாகக் குறையும் செப்டம்பர் மாதம், சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பொற்காலமாகும். மிதமான காலநிலை, பச்சைப்பசேல் எனக்காட்சியளிக்கும் இயற்கை சூழல் மற்றும் குறைவான பயணச் செலவு ஆகியவை இம்மாத்தில் சுற்றுலா செல்வதை மேலும் சிறப்பாக்குகின்றன.

மழைக்குப் பின் மலரும் கேரளாவின் எழில் கொஞ்சும் பகுதிகள்

பருவமழை முடிவடையும் தருவாயில் கேரளா மாநிலம் பசுமையின் உச்சத்தை அடைகிறது. மூணார் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் ஆலப்புழா படகு இல்லங்கள் இக்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கின்றன. மேலும், இக்காலத்தில் கூட்ட நெரிசல் குறைவாக இருப்பதால், தங்குமிடம் மற்றும் படகுச் சவாரிகளுக்கான கட்டணங்கள் கணிசமாகக் குறைந்து பயணிகளுக்குச் சாதகமாக அமைகின்றன.

வட இந்தியாவின் கம்பீரமான லடாக் மற்றும் இமயமலைப் பகுதிகள்

செப்டம்பர் மாதத்தில் லடாக் பகுதிக்குச் செல்வது ஒரு தனித்துவமான அனுபவமாகும். இக்காலத்தில் தெள்ளத் தெளிவான வானமும், மிதமான குளிரும் நிலவுவதால், பங்காங் ஏரி மற்றும் நுப்ரா பள்ளத்தாக்கு போன்ற இடங்களைச் சுற்றிப் பார்ப்பது மிகவும் எளிதாகிறது. அதேபோல், இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி மற்றும் தர்மசாலா போன்ற பகுதிகளும் தங்களது இயற்கை எழிலால் பயணிகளை ஈர்க்கின்றன.

Also Read: இரைச்சலுக்கு நோ… அமைதிக்கு எஸ்! கோவாவின் மழைக்கால விசிட்..

தமிழகத்தின் கொடைக்கானல் மற்றும் ஏலகிரி மலை வாசஸ்தலங்கள்

தென்னிந்தியாவில் இயற்கை விரும்பிகளுக்குச் சிறந்த தேர்வாகக் கொடைக்கானல் திகழ்கிறது. செப்டம்பர் மாத சாரல் மழையும், பனிமூட்டமான சூழலும் இங்கு வரும் பயணிகளுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கின்றன. கூட்ட நெரிசலின்றி அமைதியான முறையில் வார இறுதிநாட்களைக் கழிக்க விரும்புவோருக்குக் கொடைக்கானல் மற்றும் ஏலகிரி ஆகிய இடங்கள் மிகச் சிறந்த தேர்வாகும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us