வெறும் 45 நிமிடங்கள்.. ஆபரேஷன் சிந்தூர் லோகோவை வடிவமைத்த ராணுவ வீரர்கள்.. யார் இவர்கள்?

Operation Sindoor Logo : ஆபரேஷன் சிந்தூர் லோகோவை இரு ராணுவ வீரர்கள் வடிவமைத்துள்ளனர். இவர்களின் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அவர்கள் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றும் ஹவில்தார் சுரீந்தர் சிங் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சிந்தூர் லோகோவை 45 நிமிடங்களில் வடிவமைத்துள்ளனர்.

வெறும் 45 நிமிடங்கள்.. ஆபரேஷன் சிந்தூர் லோகோவை வடிவமைத்த  ராணுவ வீரர்கள்.. யார் இவர்கள்?

ஆபரேஷன் சிந்தூர் லோகோ வடிவமைத்த ராணுவ வீரர்கள்

Updated On: 

28 May 2025 08:35 AM

டெல்லி, மே 28 : ஆபரேஷன் சிந்தூர் (operation sindoor) நடவடிக்கைக்கான லோகோவை வடிவடைத்த ராணுவ அதிகாரிகளின் புகைப்படங்களை இந்தியா ராணுவம் வெளியிட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் லோகோ மற்றும் பெயர் அனைவரின் கவனத்தை பெற்ற நிலையில், அதனை வடிவமைத்தவர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே கொந்தளிக்க வைத்தது. இதற்கு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படியே, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை 2025 மே 87ஆம் தேதி தொடங்கியது.

ஆபரேஷன் சிந்தூர்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. இப்படியே இரு நாடுகளும் மூன்று நாட்கள் தாக்குதல் நடத்திய நிலையில், 2025 மே 10ஆம் தேதி தாக்குதல் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், ஆபேரஷன் சிந்தூர் மக்களிடையே பெரும் கவனம் பெற்றது. ஆபேரஷன் சிந்தூர் பெயர் மற்றும் அந்த லோகோவை வைரலானது. பஹல்காம் தாக்கதலை கணவர்களை இழந்த பெண்களை குறிக்கும் வகையில் சிந்தூர் என இந்திய ராணுவம் பெயரிட்டது.

பெண்கள் நெற்றியில் வைக்கு திலகத்தை குறிக்கவே, சிந்தூர் என பெயரிடப்பட்டது. சிந்தூர் லோகோவில், O என்ற வார்த்தைக்கு பதிலாக, சிறிய கிணத்தில் சிந்தூர் இருப்பது போன்று, ஆங்காங்க குங்குமம் சிதறி இருப்பது போன்று லோகோ வடிவமைக்கப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர் லோகாவை  வடிவமைத்த இரு ராணுவ வீரர்கள்


சிந்தூர் என்ற பெயருடம் மக்களிடையே கவனம் பெற்றதை அடுத்து,  அந்த நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது.  அந்த அளவுக்கு சிந்தூர் பெயர் மக்களிடையே பெரும் கவனத்தை பெற்றது. இந்த நிலையில், இந்த  ஆபரேஷன் சிந்தூர் லோகோவை வடிவமைத்த ராணுவ வீரர்களின் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இந்த லோகோவை எடிட்டிங் நிபுணர்கள் செய்து இருப்பார் என்ன எண்ணப்பட்ட நிலையில், இதனை இரு ராணுவ வீரர்களே வடிவமைத்துள்ளது. லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றும் ஹவில்தார் சுரீந்தர் சிங் ஆகியோரால் ஆபேரஷன் சிந்தூர் லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரு ராணுவ வீரர்களும் 45 நிமிடங்களில் சிந்தூர் லோகோவை வடிவமைத்துள்ளனர். அதே நேரத்தில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு இரண்டு பெண்கள் தலைமை தாங்கினர். கர்னல் சோபியா மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் தலைமை தாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.