ஏப்ரல் 1ல் புதிய நிதியாண்டு தொடங்க உள்ள நிலையில், ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பு மற்றும் வருமான வரி கணக்கீட்டில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. உங்கள் கையில் கிடைக்கும் சம்பளம் மற்றும் நீங்கள் செலுத்தும் வரி ஆகியவற்றில் இது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். புதிய விதிகளின்படி, நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை மொத்தச் சம்பளத்தில் குறைந்தது 50 சதவீதமாக வைத்திருக்க வேண்டும்.